states

4 இடங்களில் மேலும் ‘நம்ம ஊரு திருவிழா’!

சென்னை, மே 6- தமிழ்நாடு சட்டப்பேர வையில் கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: நாட்டுப்புற கலைஞர்க ளுக்கு வாய்ப்பு அளிக்கவும், உலகெங்கும் தமிழகத்தின் நாட்டுப்புற கலை வடிவங்களை அறிய செய்யவும் 2021-22-ஆம்  ஆண்டு பிரமாண்ட கலை  விழா நம்ம ஊரு திருவிழா  என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்டது. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நம்ம ஊரு திருவிழாக்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் கலைஞர்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படும் விழாக்கள் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவர். ரூ.6 கோடி ஒதுக்கீட்டில் இந்த விழாக்கள் நடத்தப்படும். தமிழகத்தின் அரிய கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு செல்லவும், அவற்றை  வளர்க்கவும், கலை வாய்ப்புகள் வழங்கி கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் பூங்காக்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும்  மக்கள் கூடும் பிற இடங்களில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும்  கவின்கலைப் பல்கலைக்கழ கத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் ரூ.1.43 கோடி  மதிப்பீட்டில் புனரமைக்கப் படும். பாரம்பரிய  கட்டடத்தில் செயல்படும் நாட்டின் மிகப் பழைமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியின் பாரம்பரிய கட்டடம், அதன் பாரம்பரிய அழகு மாறாமல் புதுப் பொலி வூட்டும் வகையில் ரூ.7.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் புனரமைக் கப்படும்.