தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ஒட்டன் சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டங்களில் மொத்தம் 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனை வோர்களுக்கான மூன்று புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். மேலும், 12 ஏக்கர் பரப்பளவில் 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி ஆயத்த தொழில் வளாகம் ஒன்று ரூ.37 கோடியில் கோவை மாவட்ட குறிச்சி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் நிறுவப்படும். மதுரை யில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் ஒன்று அமைக்கப் படும்.
மதுரையில் தொழில்நுட்ப பூங்கா
திருச்சியில் ரூ.345 கோடியிலும், மதுரை யில் ரூ.350 கோடியிலும் நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைப்படும். இதன் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும் 3 தோழி இல்லம்
வரும் நிதியாண்டில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகை யில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் புதிதாக தோழி விடுதிகள் கட்டப்படும். ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் விளையாட்டுப் போட்டிகளில் தலை மையமாக தமிழ்நாட்டை மாற்றிடவும் லட்சிய வேட்கையுடன் ஒலிம்பிக் பதக்க வெற்றி யாளர்களை உருவாக்கிடவும் சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மாற்று பாலினத்தவர் போன்ற 500க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10 விழுக்காடு ஊதியம் மானி யம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப் படும். மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். இராமநாத புரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.