states

78 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியீடு!

சென்னை, அக்.19-  தமிழ்நாட்டை வளமான வலிமை யான, மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திட செய்திடவும் எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. சமூகம், பொருளாதாரம், அரசி யல், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயமாக்கத்தைக் கொண்ட ஆட்சியை நடத்தி வருகிறோம். சமூக மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒருசேர  வளர வேண்டும். அந்த வளர்ச்சி  அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை யும் முன்னிறுத்தி இருக்க வேண்டும்  என்ற அடிப்படையில் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இது தமிழகத்தை மேம்படுத்தும் என்பதையும்தாண்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றும் அறிவிப்புகள் மட்டு மின்றி, அறிவிக்காத பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில், மாநிலத் தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், முதலமைச்சரின் செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள். சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட  ஆய்வு பயணங்களின்போது வெளி யிட்ட 77 அறிவிப்புகள், எனது உரைக ளின் வழியாக 46 அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள், அமைச்சர்களால் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட 2465 அறிவிப்புகள் என மொத்தம் 3337 அறிவிப்புகள், தமிழக அரசால் இதுவரை வெளியிடப் பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் மீதான தொடர்  நடவடிக்கைகள் கவனமாக  கண் காணிக்கப்பட்டு, உரிய மேல் நடவடிக் கைகள் தொடரப்பட்டு வருகின்றன.  அதன்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு களில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு அதாவது 2607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள், அறிவுரைகள் வெளியிடப்பட்டு அவற்றில் 791 அறிவிப்புகள் நிறை வேற்றப்பட்டுள்ளன. தேர்தல்  அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப் பட்டுள்ளன. (பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் பேசியதிலிருந்து)