சென்னை,ஜூன் 23- மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமை யாளர் ராம சரவணன் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018-ஆம் ஆண்டு தொடங்கி 80 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. 20 விழுக்காடு படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது. இச்சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார் உதய நிதி ஸ்டாலின். மேலும், இந்த படம் தான் தனது கடைசி படம் என்றும் கூறியுள்ளார். ‘ஏஞ்சல்’ படத்துக்கு இதுவரை ரூ.13 கோடி செலவிடப்பட்டது. ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளி யிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ‘ஏஞ்சல்’ படத்துக்காக போடப் பட்ட ஒப்பந்தத்தின் படி, இன்னும் எட்டு நாள்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். எனவே, ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். ரூ. 25 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக் கால தடை விதிக்க வேண்டும் என்று மனு வில் கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் தர உத்தர விட்டுள்ளது. மேலும், மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை ஜூன் 28 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள் ளது.