புதுதில்லி, செப். 18 - தமிழ்நாட்டிற்கு காவிரி யில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி விகிதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் மேலா ண்மை ஆணையத்தின் அவ சரக் கூட்டம், ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் திங்களன்று காணொலி காட்சி முறை யில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நா ட்டிற்கு செப்டம்பர் 14 வரை காவிரியில் கிடைக்க வேண்டிய 103.5 கன அடி நீரில், இதுவரை 38.4 கன அடி நீர்தான் கிடைத்துள் ளது; எனவே, தமிழ்நாட்டி ற்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி விகிதம் காவிரி யில் நீர் திறக்க கர்நாடக அர சுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது. முன்னதாக செப்டம்பர் 12 அன்று கூடிய காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக்குழு, தமிழ கத்திற்கு விநாடிக்கு 5 ஆயி ரம் கன விகிதம் 15 நாட் களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருந்தது. இவற்றைப் பரிசீலித்த காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு காவிரியில் 5 ஆயிரம் கன அடி விகிதம் தண்ணீர் திறந் துவிடுமாறு கர்நாடக அரசு க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.