states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழகத்திற்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு

புதுதில்லி, நவ.3- தமிழகத்திற்கு நவ.1  முதல் 23 வரை விநாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு க்கு காவிரி மேலாண்மை  ஆணையம் உத்தரவிட்டுள் ளது.   தமிழகம் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டிருந்தது. ஆனால் கர்நாடக அணைகளி லிருந்து நவம்பா் 1 முதல் 23 வரை 23 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் வீதம் பிலிகுண்டு லுவில் தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என கடந்த அக்.30 அன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. அதனை ஏற்று காவிரி மேலாண்மை தலைவர் எஸ்.கே.ஹல்தர் தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ஆளுநருக்கு எதிராக  மேலும் ஒரு வழக்கு

புதுதில்லி, நவ. 3 - தமிழ்நாடு சட்டமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுமென்றே காலதாமதம் செய்துவரும் நிலையில், ஆளுநர் முடி வெடுக்கும் விஷயத்தில் காலவரம்பு நிர்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்றை  ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மேலும் ஒரு ரிட் மனுவை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ர மணியன் உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளார். ‘தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் ஆர்.என். ரவி தேவையில் லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார். சட்டத் திற்கு புறம்பான விஷயங் களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார்.  குறிப்பாக பல்கலைக்கழ கங்களுக்கான துணை வேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவை யில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் தேவையற்ற கால தாமதங்களை ஏற்படுத்து கிறார்’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 1 லட்சம் இந்தியர்கள் : குஜராத்திகளே அதிகம்

புதுதில்லி, நவ. 3 -  அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ஆவணங்கள் இன்றி, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்றதாக 96 ஆயிரத்து 917 இந்தியர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது. 2019-2020 ஆண்டில் 19 ஆயிரத்து 883 இந்தியர்களே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற தாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 96 ஆயி ரத்தைத் தாண்டியுள்ளதாக கூறி யுள்ளது. இந்த 96,917 இந்தியர்களில் 30 ஆயிரத்து 010 பேர் கனடா எல்லை வழி யாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைய முயன்றுள்ளனர். 41  ஆயிரத்து 770 பேர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப் பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அமெரிக்காவிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அதிகாரிகள் கூறு கின்றனர். 10 பேர் நுழைய முயன்றால், அதில் ஒருவர் மட்டும் பிடிபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்ற னர். கடந்த 2022 நிதியாண்டில் (அக்டோபர் - செப்டம்பர்) மட்டும் மொத்தம் 84 ஆயிரம் இந்திய இளை ஞர்கள் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முன்றுள்ளனர். கைதானவர்களை விசாரித்ததில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காரணமாகத் தெரி வித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறி யுள்ளனர். இப்படி சட்டவிரோதமாக முயல்வோரில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த வர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரி களால் கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளனர். குழந்தைகள், குடும்ப  உறுப்பினர்களுடன் வரும் குழந்தை கள், குழந்தைகள் இல்லாமல் வரும் குடும்பங்கள், முதியவர்கள் என்று கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாக இருக்கிறார்கள். அதன்படி சுமார் 730 குழந்தைகளும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லியில் காற்று மாசுபாடு : ஒன்றிய அமைச்சர் எங்கே?

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் தலைநகர் மண்டல மான தில்லியில் பண்டிகை மற்றும் குளிர் காலங்களில் காற்று  மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டிலும் வழக்கம் போல காற்றின் தரம் வெகுவாக குறைந்துள்ள நிலை யில், காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகி யுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளி களுக்கு வெள்ளி, சனியன்று விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கோபால் ராய் மேலும் கூறுகை யில்,“தில்லி காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறும் வேளையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பூபேந்தர் யாதவ்) எங்கே? பாஜகவுக்கு எந்த ஒரு  பொறுப்பும் இல்லையா? மாசு பாட்டை ஏற்படுத்தக்கூடிய லாரி கள், வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் நிறுத்தம் என தில்லி அரசு தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்து  வருகிறது. ஒன்றிய அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுகுறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த வேண்டும்’’ என்று தெரி வித்துள்ளார்.

விடுதி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் பனாரஸ் பல்கலை.  மாணவர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் நவம்பர் 2 அன்று நள்ளிரவு  1.30 மணிக்கு ஐஐடி பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள், விடுதி மாணவியை இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள்  வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலி யல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதனை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு இதை யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்வி வளாகத்தின் பாது காப்பு அதிகாரியிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் 2000-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்கும் ஐஐடி நிர்வாகம் போராட்டக்களத்தில் மாணவர் ஒருவர் கூறுகையில்,”ஐஐடி வளாகத்தினுள் பாலி யல் அத்துமீறல் சம்பவங்கள் நடப்பது வாடி க்கையாகி வருகிறது. ஆனாலும் பல்கலைக் கழக நிர்வாகம் இதனைத் தடுப்பதற்கு எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாட்டின் புகழ்வாய்ந்த கல்வி நிலை யங்களில் ஒன்றாகக் கருதப்படும் வளா கத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதும்,  மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வ தும் அவமானகரமானது” என்று தெரிவித்தனர்.

உ.பி., தலித் பெண் பலாத்காரம்  உடலை மூன்று துண்டுகளாக்கிய கொடூரம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் தனது வீட்டிற்கு அருகில்  ராஜ்குமார் சுக்லா என்பவ ருக்குச் சொந்தமான மாவு மில்லை தின மும் காலையில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்துவந்தார்.  தலித் சமூகத்தைச் சேர்ந்தவ ரான அந்த 40 வயது பெண்ணை செவ்வாய் க்கிழமை முதல் காணவில்லை. புதனன்று தாயைத் தேடி மாவு மில்லுக்குச் சென்றி ருக்கிறார் அப்பெண்ணின் 20 வயது மகள். அங்கிருந்த ஒரு அறையை எட்டிப்பார்த்த போது, அங்கே தாயின் உடல்கள் மூன்று  துண்டுகளாக இருப்பதைப் பார்த்து  அலறித்துடித்தார். பின்னர் காவல்நிலை யம் சென்று கண்ணீருடன் நிலைமையை கூறியுள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ராஜ்கு மார் சுக்லா மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தலைமறைவாக இருப்பதால் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.  உடல்கூறாய்வு முடிவில் தலித் பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய் யப்பட்டு, 3 துண்டுகளாக வெட்டப்பட்டுள் ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்துக்காக ஆளும் பாஜக அரசிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்: அமைச்சர் பேச்சுவார்த்தை

சென்னை,நவ.3- தீபாவளியையொட்டி பொதுத் துறை நிறுவனங்களுக்கு, அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ்  எத்தனை விழுக்காடு வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சு வார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் வெள்ளி யன்று (நவ.3) நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

நடிகை பூஜா பட்  நில விவகாரம்: அறிக்கை தாக்கல்  செய்ய உத்தரவு

சென்னை,நவ.3- நிலத்தை மீட்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்ப வருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி,  அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். இந்த நிலத்தில், 26.12 செண்ட் நிலத்தை, கல்லூரி வாசல் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த  பூஜா பட் கடந்த 1999 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பட்டியலினத்த வருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை  பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி  ஒப்படைக்க வேண்டும் என்று கோத்த கிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை  உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை  பூஜா பட் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசா ரணைக்கு வந்த போது, நிலத்தை மீட்டு  விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை மீட்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை,நவ.3- திருக்கோயில் பணியாளர்கள் அக விலைப்படி 4 விழுக்காடு உயர்த்தப் படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 42  விழுக்காடாக உயர்த்தப்பட்ட அக விலைப்படி தற்போது 46 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக் கூடிய திருக்கோவில்களில் பணிபுரி யும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு 46 விழுக்காடு அகவிலைப்படி வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. பகுதிநேர, தினக்கூலி, தொகுப் பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அக விலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவது உறுதி செய்யவும் அனைத்து சார் நிலை அலு வலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.