தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி , தொழிலாளர் தினம் உட்பட முக்கியமான பொது விடுமுறை நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற மே 1 2023 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.