states

சென்னையில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்

சென்னை, அக்.25- தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு  அப்புறப்படுத்த ப்பட்டுள்ளது. அக். 23 அன்று 7.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், அக். 24 அன்று 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், அக். 25 அன்று 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும் அகற்றப்பட்டன. பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால்,  மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து. கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.