சென்னை, அக்.10- தேசிய அளவிலான தலித் உரிமை களுக்கான உச்சி மாநாடு ஆக. 26, 27ஆம் தேதிகளில் தெலுங்கானா தலைநகர் ஹைத ராபாத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் மநுவாத கருத்தியலை முன்னெடுக்கும் பாஜகவின் நடவடிக்கை கள் பட்டியலின மக்கள் மீது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பட்டியலின மக்களின் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, இட ஒதுக் கீட்டு உரிமைகளைப் பறிப்பது, சாதிய மேலாதிக்க கருத்தியலை தீவிரப்படுத்து வது என பட்டியலின மக்கள் மீது பாஜக வின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவைகளை எதிர்ப்பதோடு பட்டியலின மக்களின் நில உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தலித் உரிமைகளுக்கான உச்சி மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்திட வும்,அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிர்மாண்டமான பிரச்சார இயக்கத்தை எடுத்துச் செல்லும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்திடவும்,டிசம்பர் 4 ஆம் தேதி தில்லியில் அகில இந்திய அளவில் நடைபெறுகிற தலித் உரிமைகளுக்கான பேரணியில் பங்கேற்பது தொடர்பாகவும் சென்னையில் திங்களன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா. பெரியசாமி,ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில தலைமைக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.எம் சந்தோஷ் குமார், எஸ்.பாஸ்கர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநில பொருளாளர் இ.மோகனா,துணை பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். அக்டோபர் 18 அன்று சென்னையில் தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.