states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அக்.2 மனிதச் சங்கிலி இயக்கத்தில் விவசாயிகள் சங்கம் பங்கேற்பு

சென்னை, செப்.27- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நட ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தில் சமூகநல்லிணக்கத்தை வலி யுறுத்தி மக்கள் ஒற்றுமையைப் பாது காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை  சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழு வதும் நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனைத்து இடங்களிலும் பங்கேற்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ  வேண்டும். வன்முறை அரசியலுக்கு இட மளிக்கக் கூடாது. வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைக் கண்டித்து நடைபெறவுள்ள இவ்வியக்கத்  தில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது என்று  தெரிவித்துள்ளார்.

நேரலையான உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை!

அரசியல் சாசன அமர்வுகளில் நடைபெறும் விசாரணை செப்டம்பர் 27 முதல் நேரலை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெ னவே அறிவித்திருந்தது. அதன்படி செவ்வாய்க் கிழமை முதல் நேரலை துவங்கியது. உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி யதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை நேரலை செய்யப்பட்டது.

3-ஆவது இடத்துக்கு திரும்பிய அதானி

கடந்த வாரம் வெளியான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்துக்கு  முன்னேறி இருந்தார். இந்நிலையில், புளூம்பெர்க் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில், அதானி 135 பில்லியன் டாலர் (ரூ. 10.98 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கே திரும்பியுள்ளார்.  அமேசான் நிறுவனர், ஜெப் பெசோஸ் 138 பில்லியன் டாலர் (ரூ. 11.23 லட்சம் கோடி) சொத்து மதிப்பு டன் பட்டியலில் மீண்டும் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 245 பில்லியன்  டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

ஆளுநருக்கு எதிராக கருத்துக் கூறத் தடை!

தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, முன்பு காதி மற்றும் கிராமப்புறத் தொழில் கமிஷன் தலைவராக இருந்தபோது, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை ரூ. 1,400 கோடி  அளவிற்கு முறைகேடான வகையில் மாற்றியதாக ஆம் ஆத்மி தலைவர்கள்  குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு எதிராக ஆளுநர் சக்சேனா தில்லி உயர் நீதி மன்றத்தை நாடியிருந்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையில் உள்ள தால், ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை கூறக்கூடாது என்று நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு

சென்னை, செப். 27- இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்த னுக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ்  உயர் வருவாய் குடியிருப் பில் வீடு வழங்கும் ஆணை யினை தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று (செப்27) தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1 முறை  நாடாளுமன்ற உறுப்பின ராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலை யில் அவர் தான் வாழ்வ தற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்க வேண் டும் என கோரிக்கை விடுத் திருந்தார். அதனடிப்படையில், அவரது கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட் டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியி ருப்பில் வீடு ஒதுக்கி அதற் கான ஆணையை மு.க.ஸ்டா லின் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

எதிர்ப்புக்கிடையில் அபேக்கு அரசு மரியாதை

டோக்கியோ, செப்.27- ஜப்பானின் வரலாற்றில் அதிக நாட்கள் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் சின்சோ அபேவுக்கு அரசு சார்பான இறுதி மரியாதை செய்யப்பட்டது. ஜப்பான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்தபோது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜூலை 8 ஆம் தேதியன்று அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது கட்சியில் உள்ள பலருக்கும், மத உணர்வுகளைத் தூண்டும் அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகக் கொலை குறித்த விசாரணையில் தெரிய வந்தது. தனக்குள்ள ஆதரவு குறைவதாகக் கணித்த தற்போதைய பிரதமர்  ஃபுமியோ கிஷிதா, அந்த அமைப்புக்கும் கட்சிக்கும் உள்ள தொடர்புக்கு மன்னிப்புக் கோரினார். அதோடு, சின்சோ அபேவுக்கு அரசு சார்பாக இறுதி மரியாதை செய்யப் போவதாகவும் கூறினார். 1967 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அரசியல் தலைவர்களுக்கு இறுதி மரியாதையை அரசு செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சின்சோ அபேவின் இறுதி மரியாதையை அரசே செய்யும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. மக்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போது பல கோடி ரூபாய் செலவில் இத்தகைய இறுதி மரியாதை தேவையில்லை என்ற கருத்து எழுந்தது. அரசுத்தரப்பில் இறுதி மரியாதை ஏன் செய்யப்படுகிறது என்பதற்கான சில விளக்கங்களை பிரதமர் கிஷிதா கூறினாலும், 50 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் தெரிய வந்துள்ளது.