திருச்சிராப்பள்ளி, ஜூன் 10 - தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ரா.கலா தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி பொதுச் செயலா ளர் அ.மலர்விழி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செய லாளர் ஆ.செல்வம் துவக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு நிறை வுரையாற்றினார். முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் பி.சத்தியவாணி வரவேற்றார். மாநில பொருளாளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார். முன்னதாக கோரிக்கைகளை விளக்கி இராமேஸ்வரம், மயிலாடு துறை, குமிடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, ஓசூர் ஆகிய 7 முனைகளிலிருந்து கடந்த ஜூன் 4 ஆம் தேதி புறப்பட்ட பிரச்சார நடைப்பயணக் குழுக்கள் வெள்ளி யன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சங்கமித்தன. திருச்சி வந்தடைந்த பிரச்சாரக் குழுக்களுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சத்தியவாணி, மாவட்ட செயலாளர் அல்போன்ஸா, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச் சாமி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜேந் திரன் தலைமையில், மாவட்ட நிர்வாகி களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.