states

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக நவ. 10 வரை கிளர்ச்சிப் போராட்டங்கள்!

இடதுசாரிக் கட்சிகள்  அறைகூவல்

புதுதில்லி, நவ. 7 - பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும், இஸ்ரேல் மற்றும் அதற்கு துணைபோகும் அமெரிக்கா வைக் கண்டித்து, நவம்பர் 10 வரை கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்து மாறு, இந்திய மக்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் - லிபரேசன்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச் சார்யா மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறி யிருப்பதாவது: பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் போரை  உடனடியாக நிறுத்த வேண்டும்; பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்கப்படுவது நிறுத் தப்பட வேண்டும்; பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்கான அமெரிக்கா - இஸ்ரேல் நடவடிக்கை க்கு மோடி அரசாங்கம் அப்படியே தலை யாட்டுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழு வதும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தப் பட வேண்டும்.  அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்க்கன் (Antony Blinken) மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) ஆகிய இரு வரும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர் ஆகியோ ருடன் அமைச்சரக அளவில் 2+2 பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இந்தியா வரும் 2023 நவம்பர் 7 முதல் 10 தேதி களுக்கு இடையே, இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் கிளர்ச்சிப் போராட்டங்களின் வடிவங்கள்  எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களில் உள்ள இடது சாரிக் கட்சிகள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது. (ந.நி)