states

தீக்கதிர் விரைவு செய்திகள்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவிப்பு

புதுதில்லி, ஆக. 8 - ஜார்க்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநி லங்களில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் கள் செப்டம்பர் 5 அன்று நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

ராகுல் இரண்டாம் கட்ட யாத்திரை

புதுதில்லி, ஆக. 8 - காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் “இந்தியா ஒற்றுமை” யாத்திரையின் இரண்டாவது கட்டம் குஜராத்தில் தொடங்கி மேகாலயாவில் முடி வடையும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலா செவ்வாயன்று தெரிவித்தார். “இந்தியா ஒற்றுமை” யாத்திரையின் முதல் கட்டம் கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் தொடங்கி 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து 130 நாட்களுக்கு மேல் நீடித்தது.

இலங்கையில் வேகமாக பரவும் டெங்கு

கொழும்பு, ஆக. 8 - இலங்கையில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு மிக மோசமான அள வில் அதிகரித்து வரு கிறது. நடப்பாண்டின் குறுகிய காலத்தில் 58 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்த நிலையில், 10% நோயாளிகள் நிலை  கவலைக்கிடமாக உள்ளது. மேற்கு மாகாணத்தில்  இருந்து 50 சதவீத டெங்கு நோயாளிகள் மரு த்துவமனை வந்துள்ளனர்.

ராகுல் காந்திக்கு மீண்டும் அதே பங்களா

மோடி குடும்ப பெயர் அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  20 ஆண்டுகளாக அவர் வசித்து வந்த தில்லி 12, துக்ளக் லேனில் உள்ள பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று ராகுல் காந்தியும் காலி செய்தார். ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள  நிலையில், ராகுல் காந்தி திங்களன்று மீண்டும் மக்களவை உறுப்பினராக பதவியில் அமர்ந்தார். தொடர்ந்து ராகுல் காந்திக்கு அதே துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை: தில்லியில் காங்கிரஸ் போராட்டம்

மணிப்பூர் வன்முறை, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில்  காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினடே மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சி யினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தில்லி போலீசார் குண்டுக்கட்டாக தூக்கியும் இழுத்துச் சென்றும் கைது செய்தனர்.

‘நூலகங்களை  ஒன்றிய அரசின்  கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சியா?’

சென்னை, ஆக.8- நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை - முளை யிலேயே கிள்ளி எறியவேண்டும் என  திரா விடர் கழக  தலைவர் கி.வீரமணி கூறி யுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்  மாநிலப் பட்டியலில்  ஏழா வது அட்டவணையில் உள்ள  ‘‘நூல கங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அவை போன்ற பிற நிறுவனங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.  நூல கங்கள், காட்சியகங்கள் எல்லாம் மாநிலங்களில் உள்ளவை. முறையாக கல்வி கற்காதவர்களையும் கற்றவர்க ளாக்கும் அறிவுச்சாலைகளாக உள்ள  ‘‘நூலகங்களை ஒன்றிய அரசுக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால், வெறும் புராணங்களை, வரலாறுகளா கவும், மதக் கருத்துகளைத் தத்துவமாக வும், போலி விஞ்ஞானத்தையே அறிவியலாகவும்  ஆக்கிடுவார்கள். எப்பொழுதும் எதேச்சதிகாரிகள் - நூலகங்களை, சுதந்திர சிந்தனைகளை, வளர்ச்சிக் கூடங்களை ஏற்பதோ, சகிப்பதோ இல்லை. எகிப்தில் அலக் சாண்டிரியா நூலகம் எரிப்பு, இலங்கை யில் யாழ்ப்பாண (தமிழர்) நூலகம் எரிப்பு போன்றவை நம் கருத்துக்குரிய பழைய வரலாற்று நிகழ்வுகள் ஆகும். நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளை - முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். கருவிலேயே அதை சிதைத்து, மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதை மாநில அரசின் அவசரக் கடமையாகக் கருதவேண்டும் என்றும் வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏலக்காய் உற்பத்தி வீழ்ச்சி கிலோ ரூ.2,000 ஆக உயர்வு

வண்டன்மேடு (இடுக்கி), ஆக. 8- நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பச்சைத் தங்கமான ஏலக்காய் விலை கிலோ ரூ.2000 ஐ தாண்டியது. திங்களன்று (ஆக.7) காலை தமிழகத்தின் போடிநாயக்கனூர் ஏல மையத்தில் நடைபெற்ற ஜிசிடிசி ஏலத்தில் சராசரி விலை கிலோ ரூ.2042.33 ஆக பதிவானது. அதிகபட்ச விலை 2596 ரூபாய். ஏலத்திற்கு வந்த 31,581 கிலோவில் 29,757 கிலோ விற்பனையானது. மதியம் நடந்த  சவுத் இந்தியன் கிரீன் கார்டமம் நிறுவனத்தின் ஏலத்தில், 285 தொகுப்புகளில் 73,903.9 கிலோ ஏலக்காய் ஏலம் போனது. சராசரி விலை கிலோவுக்கு ரூ.2152.24 ஆக உயர்ந்தது. அதிகபட்ச விலையும் ரூ.2899 ஆக அதி கரித்துள்ளது. பருவநிலை மாற்றம், மழை யின்மை மற்றும் நோய்கள் காரணமாக கடந்த ஆண்டுகளை விட உற்பத்தி குறைந்துள்ளது. இடைத்தரகர்களால் மட்டுமே அதிக அளவில் ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டது. ஜூலை நடுப்பகுதியில், சந்தை ஏற்றம் காட்டினாலும், விவசாயிகளால் போதிய லாபம் ஈட்ட முடியவில்லை. ஆகஸ்டில் கூட மழை பெய்யாததால் வறட்சியை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். விலை உயர்ந்துள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.