states

நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம்

காஜியாபாத், ஜூலை 4- நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  உத்தரப் பிரதேச மாநிலம் காஜி யாபாத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்  டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக் கப்பட்டன. கடந்தாண்டு டிசம்பர் 9 ஆம் தேதி புதிய வேளாண் சட்டங்  களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்ற போது அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.  ஒன்றிய அரசு தனது வாக்குறுதி யை முழுமையாக மறுத்துவிட்டது. குறைந்தப்பட்ச ஆதரவு விலை  நிர்ணயம் தொடர்பாக குழு அமைக் கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்  பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வில்லை. மின் கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ள சட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பன  போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. 

பின்னர் இக்கூட்டத்தில், ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. அன்றைய தினங்களில், ஒன்  றிய அரசின் விவசாயிகள் புறக்க ணிப்பு நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் மாவட்ட அளவில் வாக்குறுதி எதிர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படும். ஜூலை 31 ஆம் தேதி  சர்தார் உத்தம் சிங் தியாகி தினத்  தன்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகை யில் போராட்டங்கள் நடத்தப்படும். அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து, ஆக.7 முதல் ஆக.14 ஆம்  தேதி வரை நாடு முழுவதும் ‘ஜெய்- ஜவான் ஜெய்-கிசான்’ கூட்டங்கள்  நடத்தப்படும். இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வேலையில்  லாத இளைஞர்கள் கலந்து கொள்  வார்கள் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்திற்குப் பிறகு, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் விவசாயத் தலைவர்கள் கூறுகையில், “லக்கிம்  பூர் கேரி படுகொலை சம்பவம் நடந்து 10 மாதங்களைக் கடந்தும்,  ஒன்றிய அமைச்சர் அஜய் மிஷ்ரா,  அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது நாட்டின் சட்டம்-ஒழுங்கை  கேலி செய்யும் வகையில் உள்ளது.  சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் ஆகஸ்ட் 18, 19, 20 ஆம் தேதிகளில் லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர  போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.