states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் உத்தர கண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக 7 மசூதிகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித் துள்ளது மாவட்ட நிர்வா கம். இந்த விவகாரத் திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் கிளம்பி யுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள கோட்டிலிங்கலா என்ற இடத்தில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரி ழந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட் டடத்தில் உள்ள பட்பாரா வில் 150 புதிய கச்சா வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது.

கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் (திருப்பதி - அதிலாபாத்) ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்,  மௌலானா அலி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி  போலீ சார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் தீவிர சோதனை நடத்தி னர். இறுதியில் இது வெறும் புரளி என தெரிய வர ரயில்வே காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

காங்கிரஸ் யாத்திரை ஜம்மு -காஷ்மீரில் நகர்ந்து வரும் நிலையில், ஜம்மு வில் உள்ள நர்வாலில் அடுத்தடுத்து நிகழ்ந்த  இரட்டை குண்டுவெடிப் பில் 9 பேர் படுகாயம டைந்துள்ள தாக காவல் துறையினர் தகவல் தெரி வித்துள்ளனர்.

குடியரசு தினத்தை முன்  னிட்டு தென் தமிழ்நாட் டின் முக்கிய விமான நிலையமான மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலை யில், 31-ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள் ளது.

நியூசிலாந்து அணிக் கெதிரான 2-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 2-0  என்ற கணக்கில் கைப் பற்றியது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எஸ்பிளனேட் பகுதியில் ஐஎஸ்எப் (இந்திய மதச் சார்பற்ற முன்னணி) செயற்பாட்டாளர் களுக்கும், கொல்கத்தா காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பி.எல்.சந்தோஷ் என  யார் வந்து பிரச்சாரம் செய்தாலும் கர்நாடகா வின் கோலார் தொகுதி யில் நாங்கள் வெற்றி பெறு வோம் என பாஜகவிற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

பிரபல ஆன்லைன் வர்த் தக நிறுவனமான அமே சான் தனது சொந்த விமா னமான பிரைம் ஏர் நிறு வனத்தின்  தளவாட இருப்பை  இந்தியாவில் அதிக ரிக்கத் திட்டமிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

மெக்சிகோவின் 80 விழுக்காடு பகுதிகள் வறட்சியால் பாதிக் கப்பட்டுள்ளன. அந்நாட்டின் தேசிய வானிலை சேவையின் புள்ளிவிபரங்களின்படி, அசாதாரணமாக வறண்டு போயுள்ள நிலை  முதல் எப்போதும் இல்லாத வறட்சி என்ற நிலை வரையில், 79.51 விழுக்காடு பகுதிகள் இருக்கின்றன. போதிய அளவு மழைப் பொழிவு இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வறட்சி அதிகமாகக் காணப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புஷ்ப கமல் தஹல் என்ற பிரச்சந்தா, நேபாள பிரதமராகப் பொறுப் பேற்று ஒரு மாத காலத்திற்குப் பிறகு எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பொறுப்புகள் மற்றும் எந்தெந்தத் துறைகள் என்பது பற்றி முடிவு எட்டப்பட்டுள்ளது. அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நேபாள கம்யூனிஸ்டு (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சிக்கு எட்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணை அமைச்சர்கள், மாவோயிஸ்ட் மையத்திற்கு ஐந்து அமைச்சர்கள், ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி, ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு துணைப்  பிரதமர் மற்றும் மூன்று அமைச்சர்கள் என்று வழங்கப்பட்டுள்ளன. 

பாகிஸ்தானின் முன்னாள் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைமைப் புரவ லராக முன்னாள்பிரதமர் இம்ரான்கான் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளதே இதற்குக் காரணமாகும். சட்ட ரீதியாக பிரச்சனையை எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.