states

ம.பி. பாஜக அரசுக்கு எதிராக உமா பாரதி போராட்டம் அறிவிப்பு

போபால், ஜூலை 11 - மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட மதுக் கொள்கை அமலுக்கு வந்தது. அதாவது இந்த திருத்தப்பட்ட கொள்கை மலிவான மதுபானம் கிடைக்க வகை செய்கிறது.  இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்த திருத்தப்பட்ட மதுக்கொள்கைக்கு பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, உமா பாரதி டுவிட்டரில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள் ளார். அதில் “எங்கள் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாஜிக்கு நான் ஒரு கடிதம் எழுதி யுள்ளேன், அதை நான் தற்போது பகிரங்கப் படுத்துகிறேன். 3 மாதங்கள், முக்கிய நபர்களு டனான எனது சந்திப்புகள் தொடர்ந்தன. இன்று அந்த சந்திப்புகள் பலனை தரும் என்று நான் நம்புகிறேன். 

மத்தியப் பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கு மற்றும் கலால் வரிக் கொள்கை மாநிலத்தை அனைத்து நிலையிலும் சீரழிக்கும் வகையில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரையிலாவது முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மது  விற்பனைக் கடைகள், பார்களை மூடக்கோரி  அக்டோபர் வரை இந்த இடங்களுக்கு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறேன். அடுத்த கட்டமாக காந்தி ஜெயந்தி (அக்டோபா் 2)  முதல் பெண்களைத் திரட்டி பேரணி நடத்த இருக்கிறேன். எனது வே ண்டுகோள் என்னவென்றால், மதுபானம் ஒரு அரசியல் பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை, அது எனது தனிப்பட்ட பிரச்சனையும் அல்ல எனவே, அதற்கு ஆதர வாக யார் இருந்தாலும் அவர்கள் மட்டத்தி லிருந்து முயற்சி செய்யலாம்”  என பதிவிட்டுள்ளார்.  மேலும், நட்டாவுக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “பாஜக ஆளும் மாநிலங் கள் அனைத்திலும் விதிக்கப்பட வேண்டிய ஒரே மாதிரியான மதுபானக் கொள்கை  குறித்து கட்சிவழிக்காட்டுதல்களை வழங்க வேண்டும்” என்றும் உமா பாரதி வலியுறுத்தி யுள்ளார்.