புதுக்கோட்டை, ஜூன் 25- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை வட்டம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குட்பட்ட கீழ வாண்டான் விடுதி வயல்வெளியில் விசய ரெகு நாதராயத் தொண்டைமானால் ஏற்படுத்தப்பட்ட ‘‘விசய ரெகுநாதராய சமுத்திரம்’’ எனும் பாசனத்திற்கான நீர்நிலை மற்றும் மிகை நீர் வெளிப் போக்கு அமைப்பான கலிங்கு அமைத்தது குறித்த புதிய கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையர் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மங்க னூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்ப திலும், இயற்கை வளங்களை போற்றி வளர்ப்பதிலும், பொதுமக்க ளுக்கு தேவையான வசதிகளை ஏற் படுத்தித் தருவதிலும் சிறந்து விளங்கினர். குறிப்பாக தொண்டை மான் மன்னர்களின் சிறப்புகளாக, அவர்கள் அமைத்த நீர்நிலைகளை யும், அரச நிர்வாக கட்டமைப்புகளை யுமே வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதமாகக் கூறுகின்றனர் , எனினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான்க ளின் பெயரில் நீர்நிலை அமைக்கப் பட்டது குறித்த கல்வெட்டு சான்றுகள் இல்லை, இந்நிலையில் கீழ வாண்டான்விடுதி கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பின் மூலம் , நூற்றாண்டு விழா காணும் ராஜகோபால தொண் டைமானின் முன்னோரும், இரண்டாவது மன்னருமான விசய ரெகு நாதராய தொண்டைமான் பெயரில் அமைக்கப்பட்ட பாசன நீர்நிலைக் கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு மூலம் தொண்டைமான்கள் விவசா யத்திற்கு முக்கியத்துவம் அளித்த வர்கள் என்ற கருத்து உறுதியாகிறது.
கல்வெட்டுச் செய்தி
இந்தக் கல்வெட்டில் மேற்புறம் திருநாமக்குறியீடும், அதன் கீழே ஸ்ரீ விசயரகுநாத ராயசமுத்திரம் அற்கிர காரத்து கலிங்கில் என்ற தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது. கல் வெட்டின் கீழ் பகுதியில் ஏர் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. கல்வெட்டு இருக்கும் ஊரான துவார் கிராமத்தில் அக்கிரகாரம் என்ற குடியிருப்பு பகுதி இருந்திருப்பது குறித்து மக்கள் செவி வழிச் செய்தி யாக தெரிவிக்கின்றனர், இத்தகவல் மூலம் இவ்விடத்தின் அருகாமையில் இக்கலிங்கு அமைக்கப்பட்டு, அக்கிரகாரத்து கலிங்கில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கருதலாம். கல்வெட்டின் காலம் தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது மன்னர் விசய ரகுநாதராய தொண்டைமான் ஆட்சிக்காலமான பொ.ஆ 1730 முதல் 1769 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த பாசன நீர்நிலை ஏற்படுத்தப்பட்டுள் ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மன்னரின் பெயரிலேயே விசயரெகுனாத ராய சமுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டு அர்ப்பணித் திருப்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.
விவசாயத்தை போற்றிய மன்னர்
இந்த நீர்நிலை அமைப்பு விவ சாயத்துக்காகத்தான் ஏற்படுத்தியது என்பதை வெளிப்படுத்தும் வகை யிலும், விவசாயப்பணியை பெருமைப் படுத்தும் வகையிலும் கல்வெட்டின் கீழ்ப்புறம் கோட்டுருவமாக கலப்பை யுடன் கூடிய விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விவசாயி சின்னம் பொறிக் கப்பட்ட கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டத்தின் வேறு எந்த பகுதியி லும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று ஆ.மணி கண்டன் கூறினார். இந்தக் கள ஆய்வின்போது துவார் உயர்நிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.