சென்னை, செப்.19- செப்டம்பர் 6 அன்று சென்னை பல்கலைக்கழ கம், கல்வியியல் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அந்தக் குழுக்களில், முதன்முறை யாக யுஜிசி பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தக் குழுவில், தமிழக ஆளு நரின் பிரதிநிதியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத் தின் துணை வேந்தர் பேரா சிரியர் பட்டு சத்யநாரா யணா, தமிழக அரசின் பிரதி நிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினரு மான கே.தீனபந்து, பல் கலைக்கழக செனட் பிரதிநிதி யாக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.ஜெகதீசன் ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற்றுள் ளனர். யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பீகார் மத்தியப் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் ரத்தோர் தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.