states

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம்

சென்னை, ஏப்.28- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனை தீ விபத்து தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 105 வருட பழமையான கட்டிடத்தில் நரம்பி யல் துறை இயங்கி வருகிறது. இங்கு ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்து ஏற்பட்டது. அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கையால் உயிர்சேதம் முற்றிலும் தடுக்கப்பட்டது” என்றார்.  உண்மையில் இதுவே வேறு  ஆட்சியாக, வேறு முதல்வராக இருந்திருந்தால் அந்த கட்டடத்திற் குள் இருந்த 128 பேரும் பலியாகி இருப்பார்கள். முதல்வர் எடுத்த துரித மான நடவடிக்கையில் 128 உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்றும்  அமைச்சர் கூறினார். தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டிடம் மிகவும்  பழையானதாகும். இதற்கு முன்பு  10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுக முறையாக பராமரிக்க தவறி யதே இந்த தீ விபத்துக்கு காரண மாகும் என்றும் இப்போது அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டிடம் கட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.