states

img

சாலை விபத்தில் இளம் பெண்ணைப் பலி கொடுத்த நேபாள நாட்டினர்

பெரம்பலூர், அக். 20 -                                   சுற்றுலாவின் போது உடன்வந்த வரை விபத்திற்கு பலி கொடுத்து, செய்வதறியாது தவித்த நேபாள நாட்டி னருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி புரிந்தது. நேபாளம் நாட்டின் சர்லாய் மாவட்டம் தனுகால்புர்மா கிராமத்தைச் சேர்ந்த 40 க்கும் மேற் பட்டோர் அக்டோபர் 18 அன்று இரவு 10 மணியளவில் பேருந்தில் இராமேஸ்வரம் சென்றுகொண்டி ருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆஞ்சநேயர் மலை அருகே பேருந்தை நிறுத்தி ஓய்வு  எடுத்துள்ளனர்.  அப்போது, சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார்  மோதியதில் நேபாள பெண் மான்குட்டியாதேவி (40) சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு  மருத்துவமனைக்கு வந்த நேபாள நாட்டினர் செய்வதறியாமல் மிகுந்த கஷ்டப்பட்டனர். பின்னர், பாடாலூர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகியின் ஆட்டோவை நாடியுள்ள னர். ஆட்டோவில் உள்ள கொடியை பார்த்ததும் நாங்களும் நேபாளம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளோம் என தெரிவித்து உதவி கோரியுள்ளனர். உடனடியாக சிபிஎம் மாவட்ட செய லாளர் பி.ரமேஷ் மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின்  சிபிஎம் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை ஆகியோருக்கு ஆட்டோ சங்க நிர்வாகி பிரகாஷ் தகவல் அளித்தார். இதையடுத்து  கட்சித் தலை வர்கள் அக்டோபர் 19 அன்று அதி காலை விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பின்னர் பாடாலூர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நேபாள நாட்டுத் தோழர்களு டன் கூடவே இருந்து, அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடித்து இறந்தவரது உடலை பெற்று பெரம்பலூர் ஆத்தூர் சாலையிலுள்ள மின்மயானத்தில் தகனம் செய்தனர். மான்குட்டியாதேவியின் அஸ்தியை நேபாள மக்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி களுக்கு நன்றியை தெரிவித்து, விடைபெற்றுச் சென்றனர்.