தமிழகத்தில் இன்று முதல் செப். 2 வரை மழை
சென்னை, ஆக,27- வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கட்கிழமை (ஆக.28) முதல் செப்.2-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாஜக கை விரிப்பு : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பல்
சென்னை, ஆக,27- அ.தி.மு.க.வோடு எப்படியாவது இணைந்து செயல்பட வைத்து விடு வார்கள் என டெல்லி பாரதிய ஜனதா தலைவர்களை மலைபோல நம்பி இருந்தோம். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதர வாளரான மூத்த நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:- எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நாளில் இருந்தே டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை எங்களோடு பேசிக் கொண்டே இருந்தது. ஈரோடு இடைத் தேர்தலின்போது பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து விட வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலை வர்கள் வெளிப்படையாகவே பேச்சு நடத்தியதுபோல செயல்பட்டனர். ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. அதே நேரத்தில் ஓ.பி.எஸ். இல்லாமலேயே தங்கள் பலத்த காட்ட முடியும் என்று எடப்பாடி பழனி சாமி தரப்பினர் கூறியதை கேட்டு பாஜக மேலிடம் கடைசி நேரத்தில் எங்களை ஏமாற்றி விட்டது. நாடாளுமன்ற தேர்த லுக்குள் அ.தி.மு.க.வில் நீங்கள் எல்லாம் சேர்ந்து விடுவீர்கள் என்று அவர்கள் சொல்லியதை கேட்டு செயல்பட்டு வந்தோம். தற்போது தனிக்கட்சியை தவிர வேறு வழியே இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறு ஓ.பி.எஸ். ஆதரவாளர் தெரிவித்தார்.
தீ விபத்து
ராணிப்பேட்டை, ஆக. 27 – ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை காவலர்கள் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள காவலர்கள் விளை யாட்டு மைதானத்தில் வாலாஜா காவல் நிலைய வழக்கு சம்பந்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் சனிக்கிழமை (ஆக. 26) அங்கு தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்த னர்.
தேசிய நல்லாசிரியர் விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை,ஆக,27- ‘தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி யுள்ள மதுரை,அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீர கேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள் ளார். கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம் என்று டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செப்.1 முதல் அக்.16 வரை பயிற்சி
சென்னை, ஆக,27- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை இந்த பயிற்சி அளிக்க ப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 7 முதல் 29 வரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குழு சார்ந்த பயிற்சியும், செப்டம்பர் 7 முதல் 9 வரை பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு மன்ற செயல்பாடுகள் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. செப்டம் பர் 11 முதல் 16 வரை தேர்ந்தெடுக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியில் துறை பயிற்சி வழங்கப் படுகிறது. செப்டம்பர் 11 முதல் 15 வரை தேர்ந் தெடுக்கப்பட்ட பிஆர்டிஇ மற்றும் டிஐஇடி விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கம் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. செப்டம்பர் 19, 20 ஆகிய நாட்க ளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9, 10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழி காட்டுதல் பயிற்சி நடக்கிறது. செப்டம்பர் 25 முதல் 27 வரை 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அக்டோபர் 3 முதல் 9 காலகட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரி யர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சி வழங்கப் படுகிறது.
நிலவின் வெப்பநிலை ஆய்வு
“சந்திரயான்-3” விண்கலத்தில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ஆய்வு செய்யும் பணி களை தொடங்கியுள்ளது. விக்ரம் லேண்ட ரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுவதாக வும், விக்ரம் லேண்டரில் உள்ள நிலவின் மேற்பரப்பை பரிசோதிக்கும் கருவி அனுப்பிய முதல்நிலை “கிராப்”-ஐ ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
வாழைப்பழம் விலை கிடுகிடு உயர்வு
கேரளம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாழைப்பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 60 பழங் கள் கொண்ட ரஸ்தாளி வாழைப்பழ தார் ஒன்று 300 ரூபாயில் இருந்து ரூ. 900 ஆக அதிகரித்துள்ளது. நாட்டு வாழைப்பழம் ஒன்று 5 ரூபாயில் இருந்து ரூ. 10 வரை விற்பனை செய்யபப்டுகிறது.
தயாராகும் உதகை பூங்காக்கள்
2ஆம் சீசன் நெருங்கிய நிலையில் உதகை அருகே உள்ள தொட்ட பெட்டா தேயிலை பூங்காவில் உள்ள புல் மைதானங்களை சீரமைக்கும் பணி கள் துவங்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதி யில் உள்ள தேயிலை பூங்காவையும் தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள் ளன. பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில், புல் மைதானங் கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வரு கிறது. இங்குள்ள புல் மைதானங்கள் பச்சை கம்பளம் விரித்ததுபோல் காட்சி யளிக்கின்றன.
தேசிய சராசரியை விஞ்சிய தமிழக வளர்ச்சி
நமது அயராத முயற்சிகள் மூலம் இந்தி யப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் தமிழ்நாட்டை நிலை நிறுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள் ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் வலைத்தளத்தில், “பெரும் பெரு மிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி! நமது திராவிட மாடல் அரசு தமிழ் நாட்டைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது. நமது அயராத முயற்சிகள் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 8 சத வீதம் எனும் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்து, இந்தியப் பொரு ளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாகத் தமிழ் நாட்டை நிலைநிறுத்தியுள்ளன. நடப்பு விலை யில் 2022-23 ஆண்டுக்கான நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP) 14,53,321 கோடி ரூபாயாக உயர்ந்து, 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத் துள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவை மலைக் கோவிலில் ரோப் கார் சேவை
கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் அனு வாவி சுப்பிரமணிய சாமி மலைக்கோவிலில் கோவிலில் ரோப் கார் சேவை அமைப்பது குறித்து தமிழக அர சின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முதிய வர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு கோவில்களில் ரோப் கார் மற்றும் தானி யங்கி லிப்ட் வசதி செய்து தரப்பட்டு வரு கிறது. அந்த வகையில் அனுவாவி மலைக் கோவிலில் 460 மீட்டர் தொலைவிற்கு ரூ. 13 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே கரூர் அய்யர்மலை, சோளிங்கர் கோவில் களில் ரோப் கார் அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றன. தொடர்ந்து திருக் கழுக்குன்றம், திருநீர்மலை உள்ளிட்ட கோவில்களில் ரோப் கார் வசதி அமைக் கப்படும் என்று தெரிவித்தார்.
உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள்
திருநெல்வேலி மாவட்டம், திசை யன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஞாயிறன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சரியான நேரத்தில் பணி யில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவ டிக்கை மேற்கொள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு சரிவர பாதுகாப்பின்றி இருந்ததை பார்த்த அமைச்சர், செவிலியரிடம் விசா ரித்தார். அலட்சியத் தன்மையுடன் பணி யாற்றியதை அறிந்து, அந்த ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி மற்றும் பாம்புக்கடி மருந்துகள் கை யிருப்பு உள்ளதை பொதுமக்கள் தேவைக்கேற்ப அறிந்து பயன்படுத்தும் வகையில், அதற்குரிய மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தினார்.
ஒரு தீர்மானம் போட்டிருக்கலாமே!
மாநாடு எவ்வாறு நடைபெறக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் அதிமுக நடத் திய மதுரை மாநாடு. அதிமுக மாநாட்டில் யாராவது அரசியலோ, கொள்கையோ பேசினார்களா? இல்லை, புளிசாதம், தக்காளி சாதம் எப்படி இருந்தது எனப் பேசினர். ஆடல் பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கூறும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாமே? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறையில் பேசிய போது...