உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி ஆகியவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க், பிபிளான் ஆகிய இளநிலை பட்டப்படிப்பு சேர்வ தற்கான ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. jeemain.nta.ac.in என்ற இணை யதளத்தில் மார்ச் 2-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரி வித்துள்ளது.
30 சதவீத கூடுதல் வருமானம் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.3.1 கோடி மோசடி செய்த குஜராத் வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் ஞாயிறன்று அதிகாலை 1.32 மணி அளவில் 80 கி.மீ. ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட் டது. மிதமான அளவு நிலநடுக்கம் என்பதால் கட்டி டங்கள் லேசாக குலுங்கிய நிலையில், பெரியளவு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் ஓர்ச்சா காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோம கல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பால் இறந்து விட்டதாக நாடகமாடிய நடிகை பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீசாருக்கு நூற்றுக்கணக்கில் புகார் வரு கின்றன. வழக்குப்பதிவு செய்யப்பட்டால் பூனம் பாண்டேவுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில், அசாம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.'
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சனி யன்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு காரணமாக அவர் பதவி விலகி இருக்கலாம் என தக வல் வெளியாகியுள்ளது. பன்வாரிலால் புரோகித் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் இருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு - காஷ்மீரில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
விரிவான பயணத்திட்ட விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் இறுதி செய்யப்பட்டவுடன் உத்த ரப்பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நுழையும் பொழுது “இந்தியா” கூட்டணி கட்சி களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.