states

அதிமுக ஆட்சியில் தேசத் துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்

புதுதில்லி, மே 11-  தமிழகத்தில் 2010 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாட்டி லேயே 2-ஆவது இடத்தைபெற்றுள்ளது.  தேச துரோகம் தொடர்பான இந்திய  தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு  குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து  வருகிறது. இந்தச்  சட்டத்தை மறுபரி சீலனை செய்யத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படு வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது.  அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசத் துரோக வழக்கு களையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள் வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020-ம்  ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநில மாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது.  தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து தமிழ்நாட்டில் - 139, உத்தரப் பிரதேசத்தில் - 115, ஜார்க் கண்ட்டில் -62, கர்நாடகாவில் - 50, ஒடிசா வில் - 30, அரியானாவில் - 29, ஜம்மு காஷ்மீரில் - 26, மேற்குவங்கத்தில் - 22, பஞ்சாப்பில் - 21, குஜராத்தில் - 17,  இமாச்சல் பிரதேசத்தில் - 15, தில்லி யில் - 14, லட்சத்தீவில் - 14, கேரளாவில்  - 14 என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சத வீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள் ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3  சதவீதமாக உள்ளது. குற்றம்சாட்டப் பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்ற வாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.