states

img

பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் சிபிஎம் தலைவர்களிடம் முறையீடு

நாகர்கோவில், அக். 4- “உரிமைகள் மறுக்கப்பட்டு போலீ சின் தடியடியையும் எதிர்கொண்ட எங்களை குற்றவாளிகளாக்கி காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை களை கைவிட வேண்டும். ஏழு தலை முறைகளாக வசிக்கும் எங்களது குடி யிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண் டும்” என்று நாகர்கோவில் அருந்ததி யர்  தெரு மக்கள் கேட்டுக்கொண்டனர்.  பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமையிலான குழுவினர் அக்டோபர் 4 புதனன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ஆதரவு தெரி வித்தனர்.  அப்போது பாதிப்புகளை தெரி வித்த மக்கள், “நாங்க யாரும் போலீசை தாக்கவில்லை. ராமகிருஷ்ணன் என்கிற வாலிபன் தலையில் மண் ணெண்ணெய் ஊற்றிக்கொண்டான். அவனை பிடிக்கச் சென்ற இன்ஸ்பெக் டர் துணியிலும் பட்டுவிட்டது. அதற் காக அந்த பையனை அடித்து எங்கே  கொண்டு போனார்கள் என்றே தெரி யல. எத்தனை பேரை கைது பண்ணி னாங்க, எங்க வச்சிருக்காங்க ஒண்ணுமே தெரியல. எங்க தெருவ அடைச்சு வெளியே போகவர அச்சுறு த்தலா நிக்கிறாங்க. போலீசு அடிச்சு காயம் பட்டவங்கள ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக முடியல” என தெரிவித்தனர்.

அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தீர்வுகாண்க!

இதன்பின்னர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்  ஏ.வி.பெல்லார்மின் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அருந்ததியர்கள் வாழும் இந்த தெரு வில் மன்னர் காலத்தில் இவர்களுக்கு பட்டா கொடுத்ததாக கூறுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் இது சம்பந்த மாக பல இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். தற்போது மக்கள் பட்டா கோரி ஒரு  இயக்கத்திற்கு போகும்போது அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நியாய மான இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கியிருக்கலாம். அதனை மறுத்து தடுத்து, காவல்துறை மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  காவல்துறையின் இந்தச் செயல் எந்த முறையிலும் பொருத்தமானது அல்ல. தொடர்ந்து காவல்துறையின் அச்சுறுத்தல் காரணமாக மக்களால் இயல்பாக வாழ முடியவில்லை‌. இங்குள்ள நிலவரம் மிகவும் மோச மாக உள்ளது. ஏதோ பெரிய கல வரம் நடந்த இடம் மாதிரி காவல் போடப்பட்டுள்ளது‌. எனவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சனையை தீவிரமாக விசாரிக்க வேண்டும். நியாயமான கோரிக்கை யான பட்டா கேட்டு போராடியவர்கள் கைது செய்யப்பட்டது சரியானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும். இந்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும். இவர்களுக்கு பட்டா  கொடுக்க வேண்டும். இல்லையென் றால் நாங்கள் இந்த பிரச்சனையை கையிலெடுத்து தெருவில் இறங்கிப் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.  மூத்த வழக்கறிஞர் செலஸ்டின், மாநகரச் செயலாளர் கே.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  அகமது உசேன், எஸ்.அந்தோணி, என்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் உட னிருந்தனர். முன்னதாக அருந்ததி யர் தெருவில் குடிநீர் குழாய் பதிக் கப்பட்டுள்ள பகுதியில் சாக்கடை நீர் தேங்கியிருப்பது போன்ற அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.