states

img

ஏழைகள் இல்லாத முதல் மாநிலமாக கேரளா உருவாகும்: எம்.வி.கோவிந்தன்

தளிப்பரம்பு, அக்.24- கேரளம் அடுத்த இரண்டாண்டுகளில் ஏழைகள் இல்லாத மாநிலமாக உரு வெடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள  மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்துள்ளார்.  பாஜக அரசும், நரேந்திர மோடியும் அதானியையும் அம்பானியையும் தத்தெடுத்தபோது, எல்டிஎப் அரசு  64 ஆயிரத்து 006 மிகவும் ஏழ்மையான குடும்பங்களைத் தத்தெடுத்தது; இந்தியா விலேயே ஏழைகள் இல்லாத முதல் மாநிலமாக கேரளம் மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தளிப்பரம்பு தொகுதியில் நடைபெற்ற எல்.டி.எப் குடும்பக் கூட்டத்தை எம்.வி.கோவிந்தன் ஞாயிறன்று (அக்.22) தொடங்கி வைத்தார். அப்போது மேலும் அவர் பேசுகையில், “பொருளாதார ரீதியில் கேரளத்தை நசுக்குவதுதான் ஒன்றிய அரசின் முயற்சி. 56ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால், கேரளத்தில் நலத்திட்டங்களை எதிர்பார்த்தபடி செயல்படுத்த முடிய வில்லை. மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில், பொய் சொல்லி மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. அவர்கள் கூறிய 33 சதவிகித பெண்கள் இடஒதுக்கீடு இந்த தேர்தலில் இல்லை. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடைபெறவில்லை.  உயர் சாதி மேலாதிக்கத்தை இழக்க  நேரிடும் என்ற அச்சத்தில் சங்-பரிவாரம்  சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கிறது. ஒற்றை சிவில் சட்டத்தில் சங்-பரிவாரத்தின் நிலைப்பாடு தவறானது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் தவிர, அரசியல் சாச னத்தின் அடிப்படையிலான மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை அவர்கள் ஏற்கமாட்டா ர்கள்” என்று எம்.வி.கோவிந்தன் கூறினார்.