இந்திய அளவிலும் சர்வதேச அள விலும் கடும் எதிர்ப்பான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி. தற்போது இவர் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் அன்ரிப்போர்ட்டர்’ என்ற ஒரு புதிய வெப் தொடரை இயக்கி யுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சிக்காக தனியார் ஊடகத்திற்கு விவேக் அக்னி ஹோத்ரி பேட்டியளித்தார். பேட்டியில், உங்கள் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை யை தூண்டுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, முதலில் இதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஏரா ளமான மக்களுக்கு இந்த படம் பிடித்தி ருக்கிறது. அவர்கள் இந்த படத்தை பெருமையுடன் கொண்டாடுகின்றனர் என்று விவேக் அக்னிஹோத்ரி அலட்சி யமாக பதிலளித்தார். முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங் களை எழுப்பியவர்கள் குறித்து உங்க ளுக்கு கவலை இல்லையா? என்று தொகுப்பாளர் கேட்டபோது, நிச்சய மாக அது எனக்கு கவலை அளிக்கிறது. நான் அப்போதே அதனை கண்டித்து ட்வீட் செய்திருந்தேன். அதை தவறு என்று கூறியிருந்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் பதில் சொல் லிக் கொண்டிருக்க முடியாது. என்னு டைய படம் இந்தியாவில் நடந்த இந்துக் கள் படுகொலைகளைப் பற்றி முதன் முறையாக பேசிய புரட்சிகர படம். யாரோ ஐந்து, ஆறு பேர் கோஷம் எழுப்பியது குறித்து நீங்கள் பேசினால், கடந்த 30 ஆண்டுகளாக யாரும் அவர்களை பேச விடவில்லை என்று விவேக் கூறிக் கொண்டார்.
பாஜக 1990 இல் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் குறித்து பேசி வருகிறதே? பாஜகவினர் உங்கள் படத்தை விளம்ப ரப்படுத்துகிறார்கள் என்று கேட்டதற்கு, நான் ஒன்றும் பாஜக செய்தித் தொடர் பாளர் அல்ல. அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். படத்தை பார்த்த கோடிக்கணக்கான மக் கள் பாஜகவினர் அல்ல. அனைத்துத் தரப்பு மக்களும் என் படத்தை விளம்ப ரப்படுத்தினர். பெண்கள், LGBTQ சமூ கத்தினர் உள்ளிட்ட அனைவரும் என் படத்தை விளம்பரப்படுத்தினர். அதில் பாஜகவும் ஒரு அங்கம். உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? பாஜகவினர் இந்தியர்கள் இல்லையா? என்று வக் காலத்து வாங்கும் வகையில் கேள்வி எழுப்பினார் விவேக். அரசாங்கம் ஏன் உங்கள் படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்? பிரதமர் மோடி உங்கள் படத்தை விளம்பரப் படுத்தினார் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் விவேக் அக்னிஹோத்ரியின் மேலாளர் பேட்டியை முடித்துக் கொள்ளும்படி கூறவே மைக்கை கழற்றிவிட்டு பேட்டி யிலிருந்து வெளியேறினார் விவேக் அக்னிஹோத்ரி. இதற்கு முன்னதாக அக்னி ஹோத்ரி, தொகுப்பாளரை நோக்கி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இதனை எங்கு கொண்டு செல்வீர்கள் என்பதை நான் அறிவேன். இந்த பேட்டி யை தவறான வகையில் காட்டினால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்” என்று மிரட்டும் தொனியில் கூறிச்சென்றார்.