தேனி,ஏப்.9- வெப்பச்சலனம் காரண மாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும், முல்லை ப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. மேலும், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையினால் சாலைக ளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 125 அடிக்கு கீழ் சரிந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. அணையி லிருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3650 மி.கன அடியாக உள்ளது. கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதே போல் வைகை அணை நீர் மட்டம் 68.50 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5446 மி.கன அடி யாக உள்ளது.