states

தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, செப். 12- மணல் அகழ்வு முறைகேடு தொடர் பாக தமிழகத்தில் 25-க்கும் மேற் பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். தமிழ்நாட்டில் ஆற்று மணல்  விற்பனையை அரசே தமிழ்நாடு  நீர்வளத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. ஆன்லைன் மூல மும் விற்பனை மேற்கொள்ளப்படு கிறது. ஆன்லைனில் மணல் வாங்கு பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில்  இ-ரசீது வழங்கப்படுகிறது. இவ்வாறு விற்கப்படும் மணல் மூலம் கிடைக் கும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை ஆய்வு மேற்கொள் வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.   இந்நிலையில், பல்வேறு குழுக் களாக பிரிந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோத னை மேற்கொண்டு வருகின்றனர். மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் துணை ராணுவப்படையின் பாது காப்புடன் அமலாக்கத்துறை அதி காரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். தமிழ்நாடு  காவல் துறையின் பாதுகாப்பைக் கோர வில்லை என தெரிகிறது. புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் என்பவ ருக்குச் சொந்தமான அலுவலகத் திலும், வல்லத்திரக்கோட்டை பகுதி யில் உள்ள அவரது வீட்டிலும் அமலா க்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதே போல திருச்சி கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள மணல் விற்பனை யகத்திலும், மணல் ஒப்பந்ததாரர் ரத்தினம் என்பவருக்குச் சொந்த மான இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி னர்.