states

சரண்சிங்கிற்கும் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா ‘மோடி பாசாங்குத்தனத்தின்’ உச்சம்!

2024 பொதுத்தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சௌத்ரி சரண் சிங்கிற்கும், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கியிருப்பது நரேந்திர மோடி பாஜக அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தின் உச்சம் என்றே அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெளிவாகக் கருதுகிறது.  இந்த நடவடிக்கையின் மூலம் மோடி அரசாங்கம், தான் கடந்த பத்தாண்டு காலமாகப் பின்பற்றிவந்த அதிதீவிர விவசாய விரோத,  விவசாயி விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை மூடி மறைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் கிராம மக்களை இதனால் ஏமாற்றிவிட முடியாது.

750 தியாகிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை

முதலாவதாக, மோடி ஆட்சியின் கீழ் இதுவரையிலும் நடந்த விவசாயிகள் சங்கத்தின் போராட்டங்கள் காரணமாக 750க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகி இருக்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். உயிரிழந்த விவசாயி களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதி மொழி அளித்திருந்த போதிலும் பல குடும்பங் களுக்கு அது இன்னமும் கிடைத்திட வில்லை.  சுதந்திர இந்தியாவில் வேறெந்த அர சாங்கத்திற்கும் இல்லாத இழிவான செயல் ஒன்று மோடி அரசாங்கத்திற்கு உண்டு. அது இந்த ஆட்சியில்தான் இதன் அமைச்சர் ஒருவர், அஜய் மிஷ்ரா தெனி என்பவரின் மகன்  லக்கிம்பூர் கெரி என்னுமிடத்தில், நான்கு விவசாயிகளையும் ஒரு பத்திரிகை யாளரையும் காரை ஏற்றி நசுக்கி கொன்ற பிறகும் பதவியில் நீடித்து இருந்து வரும் கொடுமையாகும்.

400 கூட்டங்களில் மோடி கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் கடந்த பத்தாண்டுகளில் கடன்வலைக்குள் சிக்கி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்று உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய தேசியக் குற்றப் பதிவேடு நிலையம் (NCRB-National Crime Records Bureau) செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் அரசாங்கம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை யில் சுட்டிக்காட்டியிருந்தபடி, விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு உயர்த்தி (C2+50%) குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாததுதான்.

2014 பாஜக தேர்தல் அறிக்கையில் விவ சாயத்தை லாபகரமானதாக்கிட, விவசாயி களுக்கு நிகர லாபத்தில் 50 விழுக்காடு விவசாயிகளுக்கு உத்தரவாதப்படுத்தப் படும் என்றும், விவசாய இடுபொருள்கள் மலிவான விலையில் அளிக்கப்படும் என்றும், கடன் வசதிகளும் செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை மோடி தன்னுடைய 400க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கூறியிருக்கிறார். எனினும், ஆட்சிக்கு வந்தபின் இந்த அரசாங்கம் என்ன செய்தது? 2015 பிப்ரவரி 15 அன்று உச்சநீதிமன்றத்தில் ஓர் உறுதி வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது.  விவசாயிகளுக்கு தள்ளுபடியில்லை கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.15 லட்சம் கோடி உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது சாத்தியம் இல்லை என்றும், உற்பத்திச் செலவி னத்தைக் காட்டிலும் 50 விழுக்காடு உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ண யிப்பது “சந்தையை சீர்குலைத்துவிடும்” (‘’distort the market”) என்று கூறியிருக் கிறது. அதிலிருந்தே எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அது ஏற்க மறுத்து வருகிறது. 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட கடன் தள்ளுபடி செய்திடவில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய கூட்டுக்களவாணி கார்ப்ப ரேட்டுகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் தள்ளுபடி செய்துள்ள மோடி அரசாங்கம் விவசாயிகள் கடனைத் தள்ளு படி செய்ய மறுத்து வருகிறது.

விவசாயிகளுக்கு அர்ப்பணித்தவர்களுக்கு துரோகமிழைப்பு

சௌத்ரி சரண் சிங்கும், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனும், தங்கள் வாழ்நாள் முழுவதும் கிராமப்புற வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இதற்கு நேரெதிராக மோடி அரசாங்கம், கார்ப்பரேட் எஜமானர்களுக்கு, அந்நிய மற்றும் உள்நாட்டு எஜமானர்களுக்கு சேவகம் செய்வதே தங்கள் குறிக்கோள் என்று கூறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே இந்திய விவசாயத்தையும், இந்திய விவசாயிகளையும் கடுமையாக பேரழிவு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் இந்திய விவசாயி கள், மோடி அரசாங்கத்தின் புதிய பாசாங்குத்தனத்திற்கு எதிராக, வரவிருக்கும் தேர்தலில் அதனை தோற்கடித்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதி. இவர்கள் உறுதி, வரும் பிப்ரவரி 16 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சாவும், மத்தியத் தொழிற்சங்கங்களும் இணைந்து அறைகூவல் விடுத்துள்ள கிராமப்புற பாரத் பந்த் மற்றும் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தை மகத்தான முறையில் வெற்றி அடையச் செய்வதில் காட்டுவார்கள்.