states

வேதக்கல்வி வாரிய பிராந்திய மையம் இராமேஸ்வரத்தில் அமைக்கும் மோடி அரசு!

வேதங்களுக்கான முறை யான கல்வியை வழங்க 1987-இல் தில்லியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக “மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்” நிறுவப்பட்டது. இதனை அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் பி.வி. நரசிம்ம ராவ் தொடங்கி வைத்தார். இந்த அமைப்பு, 1993-இல் தில்லியிலிருந்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜை னிக்கு மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் முக்கியப் பணி,  வேத பாடசாலைகளை உருவாக்கு வதும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பதும்  ஆகும். தற்போது நாடு முழுவதும் 450  கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. அங்கு மாணவர்கள் சம்ஸ்கிரு தம், வேதங்கள், உபநிடதங்கள், ஆயுர்  வேதம், கணிதம் மற்றும் சமூக அறிவியல்  பாடங்களைப் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தானின்’ கீழ் செயல்படும் கல்வி நிலையங்களுக்கு இந்திய பல்கலைக் கழகங்களின் சங்கம்  மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தையும் மோடி அரசு வழங்கியது. அதாவது, இங்கு வேதக்கல்வி பயிலும் மாண வர்களுக்கு வழங்கப்படும் 10-ம் வகுப்பு  மற்றும் 12-ம் வகுப்பு நிறைவுச் சான்றிதழ்  களை வைத்து அவர்கள் உயர்கல்வியில் சேரலாம் என்று அறிவித்தது. இதனிடையேதான், வேதக் கல்வியை  ஊக்குவிப்பதற்காக வேத, சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையங் களை இராமேஸ்வரம், பத்ரிநாத், துவா ரகா உள்ளிட்ட நகரங்களில் அமைக்க உள்  ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

ஒன்றிய அரசின் அறிவிப்பை விமர்சித்துள்ள மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், “தமிழுக்குச் சுண்ணாம்பு, சமஸ்கிருதத்திற்கு வெண்ணெய். செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறள்பீட விருது 2012 முதல் எவ ருக்கும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேத சமஸ்கிருத வாரி யத்தின் பிராந்திய மையம் ராமேஸ் வரத்தில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிக்கிறது” என கூறியுள்ளார்.