states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி அரசாங்கத்தின் ஊழல் முறை கேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின் 3 முக்கிய அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி)யின் அறிக்கைகள் வழக்கமான நடைமுறைப்படியே நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் மோடி அரசு நேர்மையற்றது. அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை, முறைகேடுகளை அகற்றுவதற்குப் பதிலாக அதை கண்டறிந்த அதிகாரிகளை அகற்றியுள்ளது. துவாரகா எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலை, பாரத் மாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், ஆரோக்கிய யோஜனா போன்ற அனைத்து திட்டங்களிலும் உயர் மட்ட அளவில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன என்பதே சிஏஜி அறிக்கைகளின் கண்டுபிடிப்பு. மோடி அரசு இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.