திருப்பத்தூர், செப்.12- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி யன். இவரது மனைவி இந்துமதி. பட்டிய லின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி யிட்டார். இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்து நாயக்க னேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி யிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடாததால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்துமதி தலைவராக தேர்ந் தெடுக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலை யில் அவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. பாண்டியன், தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் மலை கிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யன்று இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். மேலும் இந்துமதி காணாததை குறித்தும் நாயக்க னேரி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் உள்ளதாக வும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்திருந்தது. புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காவல் நிலையத்திற்கு திடீரென வந்தார். நிலுவை யில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பிரச்சனை தொடர்பான விவகாரத்தில் சிலர் தன்னை வற்புறுத்துவதாகவும், இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்து வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்தில் பயணம் மேற் கொண்டதாகவும், கணவன் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளதாக தொலைக் காட்சிகளில் வந்த செய்தி அறிந்து காவல் நிலையத்திற்கு வந்ததாக காவல் துறை யினரிடம் அவர் தெரிவித்தார்.