states

‘நல்ல உணவு தேசத்தின் உரிமை’ இயக்கம்:உணவு பாதுகாப்பில் சமரசம் இல்லை

திருவனந்தபுரம், மே 7- கேரளத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொள் ளும் ஆய்வுகளில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறியும் இயக்கத்தின் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்புத் துறை  கடந்த 5 நாட்களில் மாநிலம் முழுவதும் 1132 ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. உரிமம் இல்லாத 61 கடைகள், பதிவு செய் யப்படாத 49 கடைகள் என மொத்தம் 110 கடைகள் மூடப்பட்டன. 347 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 140 கிலோ கிராம் அசுத்தமான இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப் பட்டது. 93 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். உணவில் கலப்படம் செய்வது கடுமை யான குற்றமாகும். அத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ‘நல்ல உணவு தேசத்தின் உரிமை’ பிரச்சாரத்தின் ஒரு பகுதி யாக, மீன்களில் கலப்படத்தைக் கண்டறிய ஆபரேஷன் மீன் மற்றும் வெல்லத்தில் கலப்படத்தைக் கண்டறிய ஆபரேஷன் சர்க்கரை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேங்காய் எண்ணெய், மசாலா தூள்கள், பால் போன்ற உண வுப் பொருட்களும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும். மாநி லத்தில் உள்ள சோதனைச் சாவடிகள், கடைகள், சந்தைகள் மற்றும் உணவு தயாரிக்கும் மையங்களில் சோதனை தீவிரப் படுத்தப்படும் என்றார்.

கே.கே.சைலஜா

சுகாதாரத் துறையில் மனித முகங்களில் இவரும் ஒருவர் எனவும் தான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எண்ணற்ற பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் கே.கே. ஷைலஜா தனது முகநூல் பதிவின் மூலம் ஜோ ஜோசப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜோ ஜோசப் என்கிற மனிதாபிமா னியை ‘ஜூலை 21, 2020 அன்று எர்ணாகுளம் லிசி மருத்துவ மனையில் இதய மாற்று அறுவை சிகிச்சையின்போது சந்தித் தோம். முழு நம்பிக்கையுடனும், துடிக்கும் இதயத்துடனும் அந்த குடும்ப தலைவர் திருவனந்தபுரத்திலிருந்து எர்ணா குளம் லிசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று மணி நேரம் 11 நிமிடங்களில் நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம், லிசி மருத்துவமனையில் அந்த இதயம் சன்னி தாமஸின் உடலில் துடித்தது. இது உட்பட ஏராள மான இதய அறுவை சிகிச்சைக்கு தலைமை வகித்தவர். ஜோ  ஜோசப்பை வேறுபடுத்துவது அவரது அறிவு, திறன் மற்றும் மனிதநேயத்துடன் பணிபுரியும் தன்மை, வலியில் இருப்பவர்க ளை அரவணைத்து ஆறுதல்படுத்தும் விருப்பம். இதுவே ஜோ ஜோசப் திருக்காக்கரை மக்களின் குரலாக இருக்க தகுதி யானவர் ஆக்கியிருக்கிறது” என்கிறார் கே.கே.ஷைலஜா.