சென்னை, ஏப். 4 - ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில்தான், தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது; எனினும், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில்தான் வரி உயர்வு செய்யப் பட்டுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வானது, ஏப்ரல் 1 முதல் உடனடி யாக அமலுக்கும் வந்துள்ளது. இந்நிலையில் வரி உயர்வு குறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஒன்றிய அரசின் பரிந்துரைப்படி, 15-ஆவது நிதி ஆணையம் 2021-22 சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ‘தூய்மை இந்தியா’, ‘அம்ருத் 2.0’ ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறு வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு கள் சொத்துவரி குறித்த உயர்வை அறி விப்பது கட்டாயம் என்று கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு அதிமுக அரசு, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதம், குடியிருப்பு அல்லாத கட்டடங் களுக்கு 100 சதவிகிதம் என வரியை உயர்த்தியது. ஆனால், தேர்தல் வந்த தால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 83 சத விகித வீடுகளுக்கு மட்டுமே 25 சத விகிதம் முதல் 50 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் 58 சத விகித குடியிருப்புகளுக்கு 25 சத விகிதம் மட்டுமே வரி உயர்த்தப் பட்டுள்ளது. 7 சதவிகித பகுதி மக்களுக்கு மட்டுமே 100 சதவிகிதத்திலிருந்து 150 சத விகிதம் வரி உயர்வு செய்யப்பட்டுள் ளது. இதில் 1.47 சதவிகித குடியிருப்பு களுக்கு மட்டுமே 150 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.என். நேரு கூறி யுள்ளார்.