கார்கே பேசும்போது மைக் துண்டிப்பு
புதுதில்லி, ஜூலை 26 - செவ்வாயன்று மாநி லங்களவையில் மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா, “மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை மாநிலங்கள வையில் எப்போதும் நடந்த தில்லை. ஏன் மைக் அணைக் கப்பட்டது? யார் உத்தர வின் பேரில் இந்தச் செயல் நடந்தது?” எனக் கேள்வி எழுப்பித் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித் தார். அதற்கு மாநிலங்கள வைத் தலைவர் ஜெகதீப் தன் கர் “கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட வில்லை” என சமாளித்தார்.
கார்கே எச்சரிக்கை
இதுகுறித்து மாநிலங் களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நான் பிரச்சனை களை சபையில் முன்வைத் தேன். 50 எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் நாடாளுமன்றத் தில் எனக்கு வாய்ப்பு கிடை க்கவில்லை. நான் பேசும் போது, எனது மைக் அணை க்கப்பட்டது எனது சிறப் புரிமைக்கு அடியாகும். இது எனக்கு அவமானம். இது எனது சுயமரியாதைக்கு சவால் விடப்பட்ட செயல். அரசின் அறிவுறுத்தலின் பேரில் அவை நடத்தப் பட்டால், அது ஜனநாயகம் அல்ல” எனக் கூறினார்.
இரவு முழுவதும் போராட்டம்: சோனியா காந்தி ஆதரவு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை களுடன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 24 அன்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அமளியில் ஈடுபட்டதாக மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்ற வளா கத்தில் சஞ்சய் சிங் புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த காங்கிரஸ் மூத்த தலை வர் சோனியா காந்தி போராட்டம் நடத்திய பகுதிக்கு நேரில் சென்று சஞ்சய் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்தார். முன்னதாக செவ்வாயன்று இரவு முழுவதும் சஞ்சய் சிங் எதிர்க்கட்சி எம்பிக்கள் உடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் புதன்கிழமை மழை பெய்ததால்,சஞ்சய் சிங் தனது டுவிட்டில்,” கடவுள்... மணிப்பூரின் நிலையைக் கண்டு அழுகிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிகுறி இல்லை
“மணிப்பூரில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் கொடூர மானது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார். பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை யை வெளியிட வேண்டும். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானது” என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
‘பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது’
சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் மறுத்து விட்டதாக பேரவை செயலர் சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். நேரலைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய தூர்தர்ஷனுக்கு கடந்த 2022-ல் ரூ.44.65 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. நேரலை ஒளிபரப்புக்கு கேபிள் அமைக்க ஒன்றிய அரசு நிதிக்காக காத்திருப்பதாக தூர்தர்ஷன் கூறியிருந்தது என தமிழ்நாடு பேரவை செயலாளர் சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையை ஆக.22-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.
செந்தில் பாலாஜிக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் புதனன்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு 7 ஆயிரம் கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி மேற்கொள்ள தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, ஜூலை 26- தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12 ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.இதையடுத்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதனன்று (ஜூலை 26) காலை 10 மணிக்கு வெளியிட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சேர்க்கைக்கான கலந் தாய்வு நடைபெறுகிறது. சிறப்புக் கலந்தாய்வு 7.5 விழுக்காடு மாணவர்களுக்கு கலந்தாய்வு மற்றும் பி.டெக் படிப்பு களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெற உள்ளது. மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தாயை பராமரிக்க தவறிய மகளின் பத்திரப் பதிவு ரத்து: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 26- தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் பத்திரப் பதிவை ரத்து செய்ய பிறப்பித்த வருவாய் அலுவலரின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு தனது மகளான சுகுணாவிற்கு எழுதி வைத்தார். அதில் ஒரு நிபந்தனையும் இருந்தது. அதா வது, தனது சொத்துக்களை அவரின் பெயரில் எழுதி வைக்கும் பட்சத்தில், மீதி காலத்தில், அவர் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என நிபந்தனை குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், உறுதியளித்தபடி மகள் தம்மை கவனிக்காததால், பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி ராஜம்மாள் உடுமலைப் பேட்டை தாலுகா வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் அந்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுகுணா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ர மணியம் முன் விசாரணைக்கு வந்தது, தாயை பராமரிப்பதாக கூறியதால் சுகுணாவுக்கு சொத்து எழுதி வைக்கப்பட்ட நிலையில், அந்த நிபந்தனையை அவர் மீறியதால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக வரு வாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உரிய விசாரணைக்கு பின்னர் சட்டப்படி சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வரு வாய் அலுவலரின் உத்தரவில் தலையிட தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளு படி செய்து உத்தரவிட்டுள்ளது.
உலகச் செய்திகள்
சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுச் சண்டை இன்னும் தீர வில்லை. இந்நிலையில் இந்த உள்நாட்டுச் சண்டையால் கடுமை யான உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் உள்ள 1 கோடியே 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பாதுகாப்புத்திட்டம் கூறியுள்ளது.
சீனாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யி நியமிக்கப்பட்டிருக்கிறார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத்துறை ஆணையத் தலைவராக வாங் யி பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி னார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அண்மையில் நடைபெற்ற ஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தற்போதைய பிரதமர் பெட்ரோ சான்செஸ் அப்பொறுப்பில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய கட்சிகள் வலது சாரிகளுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று அறிவித்துள்ள தால், சோசலிஸ்ட் கட்சியே ஆட்சியில் தொடரவிருக்கிறது.