states

வணிகர் குடும்ப நல இழப்பீடு ரூ.3 லட்சமாக உயர்வு

திருச்சி,மே 5- வணிகர்களுக்கான குடும்ப நல இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3  லட்சமாக உயர்த்தப்படும் என்று  திருச்சி யில் நடைபெற்ற  வணிகர் மாநாட்டில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள் ளார்.  மாநாட்டில் முதலமைச்சர் மேலும் பேசுகையில், கொரோனா எனும் நெருக்கடியான காலகட்டத்தில் அர சுக்கு நிதியுதவி வழங்கிய வணிகர் களை பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வத ற்கான முயற்சிகளை நாம் தொடங்கி உள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்த போதும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம்.அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை  எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணி கர்கள் கைது செய்யப்பட்டார்கள். வணி கர்களின் நலன் காக்கப்பட்டதால்தான் அரசுக்கு வரும் வருவாய் காக்கப்படும். வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப் படும். வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு  வணிகர்களின் கருத்துக்களை கேட்டது  திமுக அரசுதான். ஊரடங்கு நேரங் களில் கடைகளை திறக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது. சிறுகுறு வணிகர்களுக்கு கொரோனா காலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. வணிகர்களின் நலன் நிச்சயமாக பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.