சென்னை, ஜூன் 2- மூடிக்கிடக்கும் தொழில் நிறுவ னங்களை மீட்டெடுக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: பணமதிப்பு இழப்பீடு மற்றும் கொரோனா கால பேரிடர்களால் தொழில் துறையும், வணிகமும் மிகப்பெரும் பின்னடைவை சந்தித் திருக்கின்றன. இந்த காலகட்டங்க ளில் பணப்புழக்கம் குறைந்ததன் காரணமாகவும், முதலீடு பற்றாக் குறையினாலும் வணிக வீழ்ச்சியி னாலும், பல்வேறு தடைகளை தொழில் துறை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதனால் பல்வேறு தொழிற்சாலை களும், நிறுவனங்களும் மூடப்படும் நிலை உருவாக்கப்பட்டது. தொழிற் சாலைகளிலும், வணிக நிறுவனங்களி லும் பணியாற்றி வந்த பணியாளர்க ளின் பணி இழப்பும், வணிக இழப்புக்கும் பணப்புழக்க குறை வுக்கும் காரணமாக அமைந்தது. அதனால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இன்றுவரை நீடித்துக் கொண்டி ருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிற் சாலைகளை புனரமைத்து, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், வேலை வாய்ப்பு இழந்த தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளித்திடவும், முதல்வர் துறை சார்ந்த அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோ ரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். அரசு எடுத்துவரும் பொருளாதார மீட்பு நடவடிக்கை களுக்கு வணிக நிறுவனங்கள் பின்புலமாக நின்றிடவும், நிதி ஆதாரங்களை அளித்து ஆதரவுக்கரம் நீட்டி, தொழில் துறையை மீட்டெ டுத்து, தமிழகம் இதர மாநிலங்க ளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து பொருளாதாரத்திலும் தன்னிறைவு அடைந்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.