states

புதுக்கோட்டை மன்னருக்கு நினைவு மண்டபம்: முதல்வர்

சென்னை, ஜூன் 23- புதுக்கோட்டை சமஸ்தான மறைந்த  மன்னர் ராஜா ராஜகோபால தொண்டை மானின் 100-வது பிறந்த நாளையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ராஜா ராஜ கோபால தொண்டைமான் 100வது பிறந்த நாள் விழாவையோட்டி முதல்வர்  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்மாள் தாஸ் எச்.எச்.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் (கி.பி. 1639  தொடங்கி 1948 வரை) பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத் தின் வரலாறு நீண்டு நெடியது. மாமன்னர் ரய தொண்டைமான் தொடங்கி தற்பொழுது நூற்றாண்டு விழாக் காணும் மன்னர் ராஜகோபால தொண்டைமான் வரையில் புதுக் கோட்டை சமஸ்தானத்தை உள்ளடக் கிய மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டு கள் ஏராளம். மன்னராக இருந்தபோதிலும் எளி மையான வாழ்க்கையை வாழ்ந்த தோடு, நாடு விடுதலைப் பெற்றவுடன் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் வேண்டுகோளை ஏற்று தனது புதுக் கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைத்ததோடு மட்டுமின்றி, சமஸ்தானத்தின் கஜானாவிலிருந்த 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை  உள்ளிட்ட அத்தனையும் ஒப்படைத்த பெருமைக்குரியவர். மேலும், புதுக்கோட்டை நகரின் மையப் பகுதி யில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ள அரண்மனை வளாகத்தினையும் அரசிடம் ஒப்படைத்தார். மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்நன்னாளில், மன்னரின் எளிமையையும், மக்களுக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளையும் நினைவு கூறும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் புதுக்கோட்டை நகரில் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம்  அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித் திருக்கிறார்.