states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய  மருத்துவப் பல்கலைக் கழகங்களில் அனுமதி கோரி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் போராட் டம் நடத்தினர்.
  2. போராட்டத்தால் இலங்  கையில் உள்ள அமெரிக் கத் தூதரகம் வியாழ னன்று அனைத்து தூத ரக சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள் ளது. அமெரிக்க தூதர கம் செயல்பட போராட்ட குழுவினர் கடும் எதிர்ப்பு  தெரிவித்ததால் புதன ன்றும் அமெரிக்கத் தூத ரகம் சேவையை ரத்து செய்தது.
  3. “மேற்குவங்க மாநிலத் தில் கடுமையான நிர்வா கச் சிக்கல்கள் உள்ளன குடிமக்கள், அறிவுஜீவி கள் மாநிலத்தின் நிர் வாகப் பிரச்சனையைப் பற்றி பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாநி லத்தில் நிலவும் அதீத அதிருப்தி வெளிப்படு வது ஜனநாயகத்தை அழித்துவிடும்” என்று  மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் பேசியுள் ளார்.
  4. சென்னை மேயர் பிரியா வின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபி (தனி நபர் கணக்கு முகப்பு  படம்) ஆக பயன்படுத்தி பிறருக்கு மெசேஜ் செய்து மோசடி செய்யப் பட்டுள்ளதாக மேயரின் தரப்பில் காவல்நிலை யத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.
  5. நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் பாஸ் போர்ட்டை வழங்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்துக்கு சிறப்பு நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது.
  6. திருநெல்வேலி நெல்லை யப்பர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டத் தின் போது தேரின் உச்சி யில் ஏறி குறிப்பிட்ட சாதி யின் கொடியை கட்டிய 17 வயது நபர் கைது செய்யப்பட்டார். 
  7. 18 வயதிற்கு மேற்பட்டோ ருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என்று  ஒன்றிய அரசு அறிவித்து ள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் 75 நாட்களுக்கு நாடு முழு வதும் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி யுள்ளார்.
  8. மகாராஷ்டிராவின் மும்பை, தானே, நாசிக், புனே, நாக்பூர் உள்பட 27 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 249 கிராமங்கள் பாதிக் கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியான நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. 
  9. குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். 31,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டுள்ளனர். மழையால் ஏற்பட்ட சேதம் காரண மாக கட்ச், நவ்சாரி மற்றும் தாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தேசிய நெடுஞ் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
  10. சீனாவுடனான தாராள வர்த்தக உடன்பாட்டை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நிகரகுவாவின் ஜனாதிபதி டேனியல் ஒர்டேகா முடிவு செய்திருக்கிறார். முன்னுரிமையுடன் கூடிய விலை மதிப்பில் இரு தரப்பு விவசாயப் பொருட்களை பரிமாறிக் கொள்ளும் அம்சம் இந்த உடன்பாட்டில் உள்ளது. இந்த அம்சத்திலிருந்து உடன்பாட்டை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் என்று நிகரகுவாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜோஸ் பெர்முடெஸ் அறிவித்துள்ளார்.
  11. ஹைட்டியில் பட்டினியின் துயரம் அதிகரிக்கப் போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பதோடு, கும்பல் வன்முறை வெறியாட்டமும் நெருக்கடியை தீவிரப்படுத்திவிட்டது. இதுகுறித்து ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நிவாரணப் பொருட்களை வழி மறித்து சில கும்பல்கள் கைப்பற்றிக் கொள்கின்றன. சில பகுதிகளை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் சரக்கு போக்குவரத்தும் சிக்கலாகியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
  12. வங்கதேசத்தின் அந்நியச் செலாவணி இருப்பு 4 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கும் கீழாகச் சென்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் டாலரின் மதிப்பு அதிகரித்தே வந்துள்ளதாலும், இறக்குமதிக்கான செலவு ஏறியுள்ளதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வங்கதேச அந்நியச் செலாவணி இருப்பு 4 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. வங்கதேச வரலாற்றில் இதுதான் உச்சபட்ச அந்நிய செலாவணித் தொகையாகும்.