states

கொரோனா அதிகரித்து வருவதால் தயார் நிலையில் மருத்துவத்துறை

சென்னை, ஜூன் 4- தமிழகத்தில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்  மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் கலன்கள், மருத்துவ  உபகரணங்கள் தயார் நிலையில்  உள்ளதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில்  மே 27ஆம் தேதி வரையி லான ஒரு வாரத்தில் 15,708 பேருக்கு  கொரோனா  உறுதியான நிலையில்,  ஜூன் 3ஆம் தேதி வரை 21,055 பேருக்கு தொற்று தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா  தொற்று உறு தியாகும் விழுக்காடு ரூ. 0.52ல்  இருந்து ரூ. 0.73ஆக அதிகரித் துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் மீண்டும்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள மத்திய  சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள் ளது. இதன்படி அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுக்கும் சுகாதாரத் துறை  செயலர் ராதாகிருஷ்ணன் சுற்ற றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பரிசோதனைகளை அதி கரித்தல், கூட்டுத் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து கட்டுப் படுத்துதல், மரபணு மாறிய புதிய கொரோனா  வகை பரவுகிறதா என கண்டறிய மரபணு பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் தகுதியானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மருத்து வமனைகளில் படுக்கைகள், ஆக்சி ஜன் கான்சென்ட்ரேட்டர்கள், தேவை யான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பதை  மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை ராதா கிருஷ்ணன் வழங்கியுள்ளார்.