states

மருத்துவமனைகளை புதுப்பித்து; பராமரிப்பு பணிகளை மேற்கொள்க!

சென்னை, ஏப்.28- மணல் கொள்ளை நடை பெறாமல் தடுத்திட, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மணல் அள் ளும்  ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.   இதுகுறித்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் ஏப்ரல் 27 அன்று மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னை யில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னம்  நிறைவேற்றப்பட்டது.  

தமிழகம் முழுவதும் பாலாறு, காவிரி, தென்பெண்ணை, கெடி லம் உள்ளிட்ட ஆற்றுப்பகுதி களில் 50 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட கிராமப்புற தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் கிராமப்  புற தேவைகளுக்கு மணல் அள்  ளும் தொழிலில் ஈடுபட்டுள்ள னர். கொரோனா ஊரடங்கு  கார ணமாக  மணல் குவாரிகள் மூடப்  பட்டுள்ளதால் இத்தொழிலில் கிடைத்து வந்த சொற்ப வருமான மும் இல்லாத நிலை உருவாகி யது. மூடப்பட்ட குவாரிகளைத் திறக்காததால் கிராமப்புறங்க ளில் கட்டுமானப்பணிகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு மாட்டு வண்டியில் மணல் எடுக்க 21 மணல் குவாரியும் லாரியில் மணல் எடுக்க 16 மணல் குவாரி யும் அமைக்கப்படும் என்றும், ஒரு யூனிட் மணல் விலை ஆயிரம் ரூபாய் என்றும் கட்டணம் தீர்மா னித்து அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், எந்த மாவட்டத்திலும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி திறக்கப்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் லாரிக்கான மணல் குவாரிகளுக் கான ஒப்பந்தம் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனத்துக்கு வழங்கப்  பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இயற்கை வளத்தை சூறையாட வும், மக்கள் பணத்தை கொள்ளை யடிக்கவுமே இது பயன்படும். இத னால் அரசுக்கும் இழப்பு ஏற்படும். இந்த தனியார் நிறுவனமா னது, தமிழக அரசு ஏற்கனவே நிர்ணயித்த ஒரு யூனிட் மணல் ஆயிரம் ரூபாய் என்பதற்கு பதி லாக ரூ. 2650 என்றும், மாட்டு வண்டிக்கு கால் யூனிட்டிற்கு ரூ. 224 என்ற கட்டணத்தை தற்போது ரூ. 700 ஆக உயர்த்தியும்  வசூலிக்  கிறது.  மேலும், இந்த அதீத கட்ட ணமானது மாட்டுவண்டி தொழி லாளர்களை பெரிதும் பாதித் துள்ளது. எனவே, தமிழகத்தில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்திட தனியாருக்கு வழங்கப் பட்டுள்ள மணல் அள்ளும் ஒப் பந்தத்தை உடனடியாக ரத்து  செய்து அரசே நேரடியாக குவாரி களை நிர்வகித்திடவும், முந்தைய நடைமுறைப்படி மாட்டுவண்டி யில் மணல் எடுக்க ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்திடவும் உரிய நடவடிக்கை யை விரைந்து  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்  பட்டுள்ளது.