states

தோழர் வி.என்.ராகவன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை, ஜூலை 19- தீக்கதிர் சென்னை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய தோழர் வி.என்.ராகவன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தபால் துறை, தொழிற்சங்க தலைவராக செயல்பட்டு பணி ஓய்வுக்கு பிறகு தீக்கதிர் சென்னை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய தோழர் வி.என்.ராகவன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. வேலூரில் அஞ்சல் துறையில் பணியாற்றிய தோழர் வி.என்.ராகவன் அந்த துறை ஊழியர்களை அணிதிரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தனது பணி ஓய் விற்கு பிறகு சென்னையில் தீக்கதிர் பதிப்பு துவங்கப்பட்ட போது ஆசிரியர் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு 9 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். பல்வேறு நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.