சென்னை, மே 19- மதிப்பெண்கள் மட்டுமே மனிதனை மதிப்பீடு செய்யாது என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு முடிவு கள் வெள்ளியன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளோடு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. “மதிப்பெண்கள் மட்டுமே மனி தனை மதிப்பீடு செய்யாது” எனும் முதல்வரின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி தேர்வு முடிவுகளை எதிர் கொள்ள வேண்டும்! அனைத்து மாண வர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்து கள்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.