நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து வங்கி களும் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்ட தன் அடிப்படையிலேயே மார்ச் 31 வங்கிகள் செயல் படும் என அறிவிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி விளக்கம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே சபர்மதி-ஆக்ரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது தொடர்பான முதற்கட்ட விசாரணை யில் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) சிவப்பு சிக்னலை மீறியதன் காரணமாகவே விபத்து ஏற் பட்டது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தமி ழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது கர்நாடக மாநிலம் பெங்க ளூரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17-ஆவது ஐபிஎல் சீசன் தொடர் வெள்ளியன்று தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தொடங்கு கிறது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது.
மத ரீதியில் வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு தடை விதிக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் பழமை வாய்ந்த பீரப்பன் கோவி லில் புதையல் இருப்பதாக கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் 10 அடி ஆழம் பள்ளம் தோண்டிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கட்டாய நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு வழங்க தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
மோடி அரசின் அழுத்தத்தால் எனது வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் எனக்கு உள்ளது என ஆசாத் சமாஜ் கட்சி (பீம் ஆர்மி) சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்த லுக்கான 34 பேர் கொண்ட முதற்கட்ட வேட் பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வியாழனன்று வெளியிட்டது.