இந்தியாவில் யுனெஸ்கோ பட்டியலில் உள்ள பாரம் பரிய தலங்களில் தமிழ் நாட்டின் மாமல்லபுரம் கடற்கரை 1.44 லட்சம் வெளிநாட்டு பார்வையா ளர்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர் பரத்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
சொத்து விபரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணா மலைக்கு அமைச்சர் உதய நிதி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸில், “உண் மைக்குப் புறம்பான குற் றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டுள்ளன. பொது வெளியில் பகிரங்க மன் னிப்புக் கேட்டு, அதனை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் ஆகிய வற்றில் பிரசுரிக்க வேண் டும். சொத்து விபரம் தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும். தவறினால் தகுந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு கள் தொடரப்படும். மேலும் மான நஷ்ட ஈடாக ரூ.50 கோடி வழங்க வேண்டும். அந்த பணம் முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா நாடு முதல் முறையாக உளவு செயற் கைக்கோளை விண்ணில் ஏவும் இறுதிக்கட்ட முயற்சி யில் களமிறங்கியுள்ளது. இதற்கான சோதனையை கடந்த டிசம்பர் (2022) மாதம் வடகொரியா தொழில்நுட் பக்குழு நிறைவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்டவிரோ தமாக நுழையும் இந்தி யர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், 2019 பிப்ரவரி முதல் 2023 மார்ச் வரை காலக்கட்டத்தில் சுமார் 1.49 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்று அந்நாட்டு காவல்துறையிடம் பிடி பட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் “மைத்ரி மூவி மேக் கர்ஸ்” நிறுவன அலு வலகத்திலும், புஷ்பா திரைப்படத்தின் இயக்கு னர் சுகுமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி னர். “மைத்ரி மூவி மேக் கர்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய ரங்கஸ் தலம், புஷ்பா ஆகிய திரைப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இமாச்சலப் பிரதேச மாநி லத்தில் திடீரென பனிப் பொழிவு மிக மோச மான அளவில் அதிகரித்து வரும் நிலையில், ரோஹ் தாங் பாஸில் உள்ள அடல் சுரங்கப்பாதையை பனி போர்வையால் மூடியது.
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட்டிலிருந்து 17,500 மெகா வாட் ஆக அதிகரித் துள்ளது.
உலகச் செய்திகள்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற எத்தகைய உதவியை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்திருக்கிறது. இது குறித்து இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களிடமும் தொலைபேசி வாயிலாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் பேசி யிருக்கிறார். கடந்த மாதத்தில், சீன உதவியுடன் ஈரானும், சவூதி அரே பியாவும் பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பு உறவுகளைப் புதுப் பித்துக் கொண்டன.
சூடானில் போர் நிறுத்த உடன்பாடு நடைமுறைக்கு வந்து விட்டது என்று அறிவிக்கப்பட்டபின்பும், சண்டை தொடர்வ தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தது 30 பேர், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராமல் இருப்பதற்கு துணை ராணுவப்படைதான் காரணம் என்று ராணுவத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை மீது கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்ட பிறகும், பிரான்சில் பணவீக்க உயர்வு 16 விழுக்காடாக இருந்திருக்கிறது. 1980களில் நிலவிய கடுமையான விலைவாசி உயர்வு தற்போதும் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. ஓய்வூதியத்திற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் பெருமள வில் நடந்துவரும் நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் எரி பொருள் நெருக்கடி ஆகிய பிரச்சனைகள் குறித்தும் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.