ராய்ப்பூர், பிப். 25 - 2024-இல் நடைபெற உள்ள மக் களவைத் தேர்தல், ஆட்சி மாற்றத் திற்கான நல்ல வாய்ப்பு என்றும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் இந்த தேர்தலைச் சந்திக்கும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசின் 85-ஆவது மாநாடு, சத்தீஸ்கர் மாநி லம் ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை யன்று துவங்கியது. முதல் நாள் மாநாட்டில், முன்னாள் தலைவர் கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள் ளாத நிலையில், சனிக்கிழமை யன்று அவர்கள் கலந்து கொண்ட னர். மாநாட்டுக்கு வந்த அவர் களுக்கு, கட்சியினர் ரோஜா பூக் களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநாட்டிற்குத் தலைமை வகித்து, மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, ‘’கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங் கியது. தீர்க்கமான தலைமைக் கான ஒரே மாற்றாக அது மட்டுமே இருக்க முடியும். அப்போது இருந் ததுபோல், ஒத்த கருத்துள்ள கட்சி களுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்பு கிறது” என்று தெரிவித்தார். மேலும், “எத்தகைய தியா கத்தை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். நாட்டின் ஜனநாய கத்தை குலைக்க பாஜக சதி செய்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் இந்தியாவை ஒற்றுமையாக்க முயற்சித்து வருகிறது.
ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்திக்கும், 22 ஆண்டு களாக கட்சியை தலைமையேற்று வழிநடத்திய சோனியா காந்திக் கும் நன்றி. பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிறுகுறு நிறுவனங்கள் மூலம் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். ஏழை, பணக்காரர் இடையிலான இடைவெளிக்கு இடையே பாலத்தை அமைக்க உள்ளோம். விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு உரிய விலையை பெறுவார்கள். தில்லியில் இருப்ப வர்களின் டி.என்.ஏ-வே ஏழை களுக்கு எதிரானதும் அவர்களை யும் தாக்குவதும்தான். மக்களின் வாக்குகளின் மூலமாக அரசுகளை மாற்றுவதே நமது முயற்சி. பண மூட்டைகள், சிபிஐ, அமலாக்கத்த துறை, வருமான வரித்துறை மூல மாக ஆட்சியை மாற்ற நினைக்க வில்லை” என்றும் கார்கே கூறி னார். முன்னதாக மாநாட்டின் துவக்க நாளில் பேசிய கார்கே, “2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற் றும் பொதுத் தேர்தல்கள் நடை பெறவுள்ள நிலையில் காங்கிர ஸின் மாநாடு நடைபெறுகிறது. இது ஒரு பெரிய சவால் என்பதுடன், ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பும் ஆகும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் விதி களின்படி கட்சியின் 25 செயற்குழு உறுப்பினர்களில் 12 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்; மற்றவர்களை கட்சித் தலைவர் நியமிக்கலாம். ஆனால், இந்த மாநாட்டில் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு வழங்கப் பட்டது.