states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மஹூவா மொய்த்ரா மீது ம.பி. காவல்துறை வழக்கு!

“என்னைப் பொறுத்தவரை, காளி தெய்வம், மது மற்றும் மாமிசத்தை ஏற்றுக்கொள்பவள். ‘சிக்கிம், பூட்டான் ஆகிய பகுதிகளுக்குச் சென்றால் காளிக்கு மதுவை வழங்குவார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சென்று கடவுளுக்கு பிரசாதமாக மது வழங்க வேண்டும் என்று கூறினால் அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மக்கள் தங்கள் தெய்வத்தை அவர்கள் விரும்பும்  விதத்தில் கற்பனை செய்ய உரிமை உண்டு” என்று திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறி யிருந்தார். இதையடுத்து, மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக ம.பி. பாஜக அரசின் காவல் துறை மஹூவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

லாலுவை நேரில் நலம் விசாரித்த நிதீஷ்குமார்!

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத், கடந்த ஜூலை 3-ஆம் தேதி பாட்னாவில் உள்ள வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து, தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு, முதுகில் காயமடைந்தார். தற்போது பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லாலு பிரசாத்தை, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் புதனன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் லாலுவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

‘அகமதாபாத்தை ஏன் ‘அதானிபாத்’ என மாற்றக் கூடாது?’

“நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயரை ‘பாக்யா நகர்’  என மாற்றுவோம்” என்று அம்மாநில பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஹைதரா பாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியும் ஹைதரா பாத்தை பாக்யா நகர் என்றே குறிப்பிட்டார். இதற்கு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி. ராமாராவ் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். குஜராத் தலைநகர் “அகமதாபாத் பெயரை ஏன் ‘அதானிபாத்’ என மாற்றக் கூடாது?” என்று கே.டி ராமராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நூபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: ஆஜ்மீர் மதகுரு கைது

முகம்மது நபிகளை அவதூறாகப் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாள நூபுர் சர்மா வுக்கு ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஸ்டி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். “நூபுர் சர்மாவை நானே சுட்டுக் கொலை செய்திருப்பேன். ஆனால், இப்போது கூறுகிறேன், அவரு டைய தலையை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு எனது வீட்டை பரிசாக அளிப்பேன்” என்று கூறியிருந்தார். இதற்காக, சல்மான் சிஸ்டி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத னிடையே, சல்மான் சிஸ்டியின் மிரட்டல் வீடியோவை கண்டிப்பதாக ஆஜ்மீர் தர்காவின் தலைமை குரு தீவான் ஜையினுலாபுதீன் அலி கான் கூறியுள்ளார். ஆஜ்மீர் தர்கா மத நல்லிணக்கத்தின் அடையாளம். அதை யாரும் சிதைக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லீனா மணிமேகலைக்கு உ.பி. சாமியார் கொலை மிரட்டல்!

‘காளி’ ஆவணப்படம் மூலம் இந்துக் கடவுள்களை அவமதித்து விட்டதாக இயக்குநர் லீனா  மணிமேகலை மீது சங்-பரிவாரங்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அனுமன் கோவில் சாமியார் ராஜூ தாஸ் மஹந்த் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் (லீனா மணிமேகலை) சனாதன தர்மத்தை அவமதிக்க விரும்புகிறீர்களா?. உங்கள் தலையை உடலிலிருந்து பிரிக்க விரும்புகிறீர்களா?. இதுதான் உங்களுக்கு வேண்டும்?. இந்த விஷயத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் தலை யிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு படத்துக்கு தடை விதிக்க வேண்டும். நட வடிக்கை எடுக்காவிட்டால் கடினமான சூழல் ஏற்படுத்தப்படும்’’ என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

‘மேற்குவங்கத்தில் ஜனநாயகம் சாகக் கிடக்கிறது!’

“மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை முன்னோடியில்லாதது. கற்பழிப்பு, கொலை, ஆணவக் கொலை, சூறையாடல் போன்றவற்றை தாங்கி கொள்ள  முடியுமா? அது எப்படி முடியும்? நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு, எளிதான வழி வழங்கப்  பட்டுள்ளது. நான் மே 13 முதல் 15 வரை மாநிலம் முழுவதும் சென்றேன். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் கண்ணீர் நிற்காமல் இருந்தது. சூறையாடப்பட்ட வீடுகளை பார்த்தேன். தீ வைத்த இடங்களை பார்த்தேன். ஜனநாயகம் ஏறக்குறைய இறுதி மூச்சை இழுக்கும்  ஒரு காட்சி இங்கே உள்ளது, இங்கே ஒரு போலீஸ் அரசின் அனைத்து கூறுகளும் உள்ளன” என்று மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று மறுமணம்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு வியாழனன்று (ஜூன் 7) திருமணம் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மானுக்கு தற்போது 48 வயதாகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில்தான், பகவந்த் மானுக்கு சண்டிகரில் வியாழனன்று இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. குர்ப்ரீத் கவுர் என்ற மருத்துவரை அவர் மணமுடிக்கிறார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.