சென்னை,மே 5- தமிழகம் முழுவதும் மே 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூப்பர் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள் ளது. இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 2 ஆவது டோஸ் செலுத்தாதவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முகாம் நடைபெற உள் ளது. இன்றைய தேதியில் கிராமம் வாரியாக 2 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் பட்டியல் பொதுசுகாதா ரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் கூட அமைக்கப்படும். அனை வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்த அலையில் வருவதில் இருந்து பாது காத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.