இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் இரண்டு வரையறைகளுக்கு உட்பட்டது என்பது நன்றாக தெரிந்த விஷயம். ஒன்று அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு இருக்கிறதா என அந்த சட்டத்தை அரசியல் சாசன நீதிமன்றங்கள் பரிசீலிக்கும் அதிகாரம் அதாவது நீதிமன்றத்தின் பரிசீலனை. அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப் படும் எவ்வித மாற்றமும் அதன் அடிப்படை கொள்கையை அழிக்கும் வகையில் இருக்க முடியாது. இதில் முதலாவது வரையறை பிரிவு 13 குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது வரை யறை உச்சநீதிமன்றம் உருவாக்கிய அடிப்ப டைக் கட்டமைப்பு என்ற கொள்கையை அடிப்ப டையாகக் கொண்டது. 1973 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் முன்வைக்கப் பட்ட அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் சங்க ரின் கருத்துக்கள் கேள்விக்குள்ளாக்குகிறது.
மேலும் அந்த சட்டத்தின் மைய அம்சத்தையும் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு நாடாளு மன்றத்தின் இறையாண்மையை பறித்துக் கொள்கிறது என்பதோடு தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றமே உச்சபட்ச அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற ஜனநாயக அடிப்படைக்கும் மாறானதாக அவருடைய பார்வை உள்ளது. நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதி களை நியமிக்கும் அமைப்பான (National JudicialAppointment Commiss ion)தேசிய நீதித்துறை நியமன ஆணையம் உருவாவதை உச்சநீதிமன்றம் தடுத்தது குறித்து அவருடைய கவலை நியாயமா னது என்ற தோற்றத்தை உருவாக்கு கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கு என செய்யப்பட்ட திருத்தத்தையும் இதற் கென நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்தையும் ரத்து செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றம் இதை செய்தது. ஆனால் நீதிபதிக ளின் நியமனத்தில் தங்களுக்கு போதுமான அதிகாரம் இல்லை என்பதால் தற்போது உள்ள அரசு நீதித்துறையுடன் நடத்தும் மோதலின் ஒரு பகுதியாக அடிப்படை கட்ட மைப்பு கொள்கை மீதான தாக்குதலாக குடியரசு துணைத் தலைவரின் கருத்தை பார்க்காமல் இருப்பது சற்றே கடினம்.
அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கை நாடாளுமன்ற இறையாண்மையை குறைக்கி றது என்ற சிந்தனையே அடிப்படையில் தவறானது. தனக்குரிய தன்மையின் படி நாடாளுமன்றத்திற்கு என ஒரு இறை யாண்மை உண்டு. இருந்தாலும் கூட அரசியல் அமைப்புச் சட்ட கட்டமைப்பு விதித் துள்ள வரையறைகளுக்கும் அது கட்டுப் பட்டது. நாடாளுமன்றத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தும் வேளையில் கூட சில வரம்புகள் உண்டு என்பதும் திருத் தங்களுக்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும் பான்மையை கூட தவறாக பயன்படுத்தி அரசியல் அமைப்பு சட்டத்தை வலிமை இழக்க செய்ய முடியாது. அப்படி செய்ய முயற்சி செய்யும் பொழுது இதே அடிப்படை கட்ட மைப்பு கொள்கையே அதையும் தடுக்கும் என்பதையும் அவர் மறந்து விட மாட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சில அடிப்படைகளை சட்டம் இயற்றுவதன் மூலம் கழட்டி விட்டு விட முடியாது என்ப தற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு சில வழக்குகளில் தான் இதன்படி திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பல வழக்குகளில் திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அரசியல் அமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களான சட்டத்தின் ஆட்சி, நாடா ளுமன்றத்தின் மூலம் நடக்கும் ஆட்சி, அதிகாரப் பிரிவினை, சமத்துவ சிந்தனை, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் ஆகியவை அத்துமீறி சட்டம் இயற்றுவ தன் மூலம் அழிக்கப்படுவதில் இருந்து காக் கப்படுவதும் இதே நாடாளுமன்றத்தின் வழியாகத்தான். நாடாளுமன்ற பெரும் பான்மை தற்காலிகமானது என்றாலும் இதுதான் நிலை. அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கி இன்னொரு அரசியலமைப்புச் சட்டத்தை இன் னொரு அரசியல் அமைப்பு அவை உருவாக்கு வதன் மூலம் கொண்டு வரலாம்.ஆனால் தற்போதைய அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இயங்கும் இந்த நாடாளுமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் இந்த அடிப்படை அடையாளத்தை மாற்றி விட முடியாது.
தி இந்து தலையங்கம்: ஜனவரி 14, 2023,
தமிழில்: கடலூர் சுகுமாரன்