சென்னை, ஜூலை 26- இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு மாவளவன் வாழ்த்து தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள திரௌபதி முர்முவுக்கு எமது வாழ்த்துகள். மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரவு பதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டு களிடம் விற்பவர்கள். மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரெளபதி” இவ்வாறு அந்த பதிவில் கூறி யுள்ளார்.